Wednesday, January 1, 2014

கடந்த 48 மணி நேரத்தில் மதுபோதையில் 2000 சாரதிகள் கைது!

Wednesday, January 01, 2014
இலங்கை::கடந்த 48 மணி நேரத்தில் பல்வேறு வீதி விபத்துக்களில் சிக்கிய  575 பேர்; கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த எண்ணிக்கையானது கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது 13 சதவீத அதிகாரிப்பாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் 217 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளதாக மருத்துவமனை செய்திகள் தெரிவித்துள்ளன.
இதனிடையே, பண்டிகைக்காலத்தில் மதுபோதையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டின் பேரில், கடந்த ஒரு வாரத்தில் 2000 சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடக பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

No comments:

Post a Comment