Tuesday, December 31, 2013

விடுதலை செய்யப்பட்ட இந்திய மற்றும் இலங்கை மீனவர்களில் சிலர் வடக்கு கடற்பரப்பில் இருநாட்டு பாதுகாப்பு பிரிவினரிடம் புரிந்துணர்வு அடிப்படையில் இன்று ஒப்படைக்கப்பட்டுள்ளனர்!

Tuesday, December 31, 2013
இலங்கை::விடுதலை செய்யப்பட்ட இந்திய மற்றும் இலங்கை மீனவர்களில் சிலர் வடக்கு கடற்பரப்பில் இருநாட்டு பாதுகாப்பு பிரிவினரிடம் புரிந்துணர்வு அடிப்படையில் இன்று ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

இந்திய மீனவர்கள் ஆறுபேரும், இரண்டு மீன்பிடி படகுகளும் இந்திய கரையோரப் பாதுகாப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடற்படையின் ஊடகப் பேச்சாளர், கொமாண்டர் கோசல வர்ணகுலசூரிய தெரிவித்தார்.

இந்தியாவில் தடுத்துவைக்கப்பட்டிருந்த 12 இலங்கை மீனவர்களும், 02 மீன்பிடிப் படகுகளும் இலங்கை கடற்படையினரும் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

காங்கேசன்துறையை அண்மித்த பகுதியிலுள்ள இரண்டு நாடுகளினது கடல் எல்லையில், இந்திய கரையோர பாதுகாப்பு பிரிவினரால் இலங்கை மீனவர்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடற்படையின் ஊடகப் பேச்சாளர் மேலும் கூறினார்.

No comments:

Post a Comment