Tuesday, December 31, 2013

ஜனா­தி­பதி தலை­மை­யி­லான அர­சாங்கம் எதனைச் செய்­தாலும் அதனை எதிர்ப்­பது என்ற நிகழ்ச்சிநிரலின் அடிப்­ப­டை­யி­லேயே தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு: கெஹெ­லிய ரம்­புக்­வெல!

Tuesday, December 31, 2013
இலங்கை::ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ தலை­மை­யி­லான அர­சாங்கம் எதனைச் செய்­தாலும் அல்­லது எந்த வேலைத்­திட்­டத்தை முன்­மொ­ழிந்­தாலும் அதனை எதிர்ப்­பது என்ற நிகழ்ச்சிநிரலின் அடிப்­ப­டை­யி­லேயே தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு செயற்­பட்­டு­வ­ரு­கின்­றது.

எனவே இந்த விட­யத்­துக்கு அப்பால் கூட்­ட­மைப்பின் செயற்­பா­டுகள் குறித்து பேசு­வ தில் அர்த்தம் இல்லை என்று ஊட­கத்­துறை அமைச்சர் கெஹெ­லிய ரம்­புக்­வெல தெரி­வித்தார்.
 
தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­பினர் இன்னும் நாட்டை பிள­வு­ப­டுத்தும் நோகத்­தி­லேயே உள்­ளனர்.அதற்கு தடை­யாக இருக்­கின்ற ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க் ஷ­வுக்கு எதி­ராக புலி ஆத­ரவு புலம் பெயர் மக்­க­ளுடன் இணைந்து செயற்­ப­டு­வதே கூட்­ட­மைப்பின் நோக்­க­மா­க­வுள்­ளது என்றும் அமைச்சர் குறி ப்­பிட்டார்.
பாரா­ளு­மன்றத் தெரி­வுக்­கு­ழுவின் செயற்­பா­டுகள் குறித்து விப­ரிக்­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு கூறினார்.
அவர் இது தொடர்பில் மேலும் கூறு­கையில்:-
தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு அர­சாங்­கத்தை எதிர்க்­க­வேண்டும் என்ற நிகழ்ச்சி நிரலின் அடிப்­ப­டையில் செயற்­பட்­டுக்­கொண்­டி­ருக்­கின்­றது. எனவே அர­சாங்கம் எவ்­வா­றான வேலைத்­திட்­டங்­க­ளையும் யோச­னை­க­ளையும் முன்­வைத்­தாலும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­பா­னது அவற்றை நிரா­க­ரித்­து­விடும் நிலை­யி­லேயே உள்­ளது.
அதா­வது ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ தலை­மை­யி­லான அர­சாங்­கத்தை அசௌ­க­ரி­யப்­ப­டுத்­த­வேண்டும் என்ற நிகழ்ச்சி நிரலில் கூட்­ட­மைப்பு செயற்­பட்­டு­வ­ரு­கின்­றது. அவ்­வாறு ஒரு நோக்­கத்­திலும் திட்­ட­மிட்ட நிகழ்ச்சி நிர­லுக்கு அமை­யவும் செயற்­பட்­டு­வரும் கூட்­ட­மைப்பு தொடர்பில் பேசிக்­கொண்­டி­ருப்­பதில் அர்த்­த­மில்லை.
அர­சாங்கம் எதனை செய்­தாலும் அதனை எதிர்ப்­பது என்ற நோக்­கத்­துடன் செயற்­படும் அர­சியல் கட்­சி­யுடன் எவ்­வாறு செயற்­ப­டு­வது? தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­பா­னது தொடர்ந்தும் நாட்டை பிரிக்­க­வேண்டும் என்ற இலக்­கி­லேயே செயற்­ப­டு­கின்­றது.
அந்த நோக்­கத்­துக்கு தடை­யாக இருக்­கின்ற ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க் ஷ­வுக்கு எதி­ராக சர்­வ­தே­சத்தில் இயங்கும் புலி ஆத­ரவு புலம் பெயர் மக்­க­ளுடன் இணைந்து கூட்­ட­மைப்பு நகர்­வு­களை முன்­னெ­டுத்­து­வ­ரு­கின்­றது. எனவே அந்த நிகழ்ச்சி் நிர­லுக்கு அமை­யவே அவர்­களின் செயற்­பாடு அமைந்­தி­ருக்கும்.
குறிப்­பாக தேசிய பிரச்­சி­னைக்கு அர­சியல் தீர்வு காணும் நோக்கில் நிய­மிக்­கப்­பட்­டுள்ள பாரா­ளு­மன்றத் தெரி­வுக்­கு­ழு­வுக்கு வர முடி­யாது என்று கூட்­ட­மைப்பு கூறி­வ­ரு­கின்­றது. எனினும் பாரா­ளு­மன்றத் தெரி­வுக்­கு­ழுவில் இணைந்து அர­சியல் தீர்வு காணும் செயற்­பாட்­டுக்கு ஆத­ரவு வழங்­கு­மாறு அர­சாங்கம் தொடர்ச்­சி­யாக கோரி வரு­கின்­றது. ஆனால் கூட்­ட­மைப்பை பொறுத்­த­வரை பாரா­ளு­மன்றத் தெரி­வுக்­குழு அல்ல எவ்வகையான யோசனையை முன்வைத்தாலும் அதனை ஏற்றுக்கொள்ளாது.
காரணம் அர­சாங்கம் எதனை செய்­தாலும் அதனை எதிர்ப்­பது என்ற நிலைப்­பாட்­டி­லேயே கூட்­ட­மைப்பு இருந்­து­வ­ரு­கின்­றது. எனவே இந்தக் கட்­டத்­துக்கு அப்பால் அவர்கள் குறித்துப் பேசிக்­கொண்­டி­ருப்­பதில் அர்த்தம் இல்லை என்றார்.

No comments:

Post a Comment