சென்னை::எகிப்து மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் 1973ம் ஆண்டு, தங்களுக்கு இடையே ஏற்பட்ட
சண்டை முடிந்த தினத்தை, உலக ஹலோ தினமாக கொண்டாடினர். அதன் பிறகு தற்போது 180
நாடுகளில் இத்தினம் கொண்டாடப்படுகிறது. இத்தினத்தின் முக்கிய நோக்கம், ஒவ்வொருவரும்
உலக அமைதிக்கான முயற்சியில் ஈடுபட வேண்டும் என்பதே. இன்று கொண்டாடப்படும் உலக ஹலோ
தினத்தில், குறைந்தது 10 பேரிடம் "ஹலோ' சொல்வதன் மூலம், இத்தினத்தில் நீங்களும்
பங்கேற்கலாம். சக மனிதர்களுடனான உறவை மேம்படுத்துவதன் மூலமாக, உலக மக்களிடம்
அமைதியை நிலை நாட்ட முடியும். அமைதிக்கான நோபல் பரிசு வென்ற சாதனையாளர்களும், "ஹலோ'
தினத்தின் முக்கியத்துவம் பற்றி குறிப்பிட்டுள்ளனர்



No comments:
Post a Comment