Saturday, November 23, 2013
இலங்கை::முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் தொடர்பில் ஆராய ஆணைக்குழுவொன்றினை நியமிக்க உறுதியளித்துள்ள வடமாகாண முதலமைச்சர் சி. வி. விக்னேஸ்வரனுக்கு நன்றி தெரிவித்துள்ள பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். அஸ்வர்
இலங்கை::முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் தொடர்பில் ஆராய ஆணைக்குழுவொன்றினை நியமிக்க உறுதியளித்துள்ள வடமாகாண முதலமைச்சர் சி. வி. விக்னேஸ்வரனுக்கு நன்றி தெரிவித்துள்ள பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். அஸ்வர்
யாழ்ப்பாணத்தில் தரைமட்டமாக்கப்பட்டுள்ள இஸ்லாமிய அறிஞர் ஏ. எம். ஏ. அஸீஸின் வீடு மீள் நிர்மாணிக்கப்பட்டு இஸ்லாமிய தொல்பொருள் காட்சி நிலையமாக மாற்றப்பட வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளார்.
ஏ.எச்.எச். அஸ்வர் எம்.பி முதலமைச்சர் விக்னேஸ்வரனிடம் மேலும் பல கோரிக்கைகளையும் முன்வைத்துள்ளார். நியமிக்கப்படவுள்ள ஆணைக்குழு காலம் தாழ்த்தாது தமது பரிந்துரைகளை முன்வைக்க வேண்டும். யாழ்ப்பாணத்தில் புலிகளால் சேதமாக்கப்பட்டுள்ள பாடசாலைகள் மற்றும் பள்ளிவாசல்கள் மீள் நிர்மாணம் செய்யப்பட வேண்டும்.
குறிப்பாக புலிகளால் கதீஜா முஸ்லிம் வித்தியாலயம் தரைமட்டமாக்கப்பட்டுள்ளது. யாழ். ஒஸ்மானியா கல்லூரி அரைகுறை நிலையில் உள்ளது. இவைகள் கவனத்திற் கொள்ளப்பட வேண்டும். மீள்குடியேறியுள்ள முஸ்லிம்கள் வீடு வசதியின்றி வாழ்வாதார அடிப்படை வசதிகள் இன்றி பல இன்னல்களுக்குள்ளாகி இருக்கின்றார்கள்.
முஸ்லிம்களின் காணி தொடர்பான பிரச்சினைகள் தீர்க்கப்படாதுள்ளன. நியமிக்கப்படவுள்ள ஆணைக்குழு இவ்வாறான பணிகளைத் துரிதப்படுத்தும் வகையில் தனது பரிந்துரைகளைச் சமர்ப்பிக்க வேண்டும் என்பது சமூகத்தின் எதிர்பார்ப்பாகும் எனத் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் தொடர்பில் ஆராய ஆணைக்குழு: வ-மு. விக்னேஸ்வரனுக்கு நன்றி தெரிவித்துள்ள பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். அஸ்வர்!

No comments:
Post a Comment