Monday, November 18, 2013
இலங்கை::வட மாகாணத்தில் புலிகள் இருந்த காலகட்டத்தில் அவர்களுக்கு விருப்பமானவற்றை அவர்கள் செய்ததாகவும், அனைத்திலும் தமக்கென தனியான நடைமுறைகளை கொண்டிந்ததாகவும் ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்க தெரிவித்துள்ளார்.
வடபகுதியில் காணப்படும் காணிப் பிரச்சினைகள் தொடர்பில், பொதுநலவாய அமைப்பின் ஊடக மையத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
சட்டரீதியாக
பீ என்றவருக்கு சொந்தமான காணியை ஏ என்ற ஒருவருக்கு புலிகள் வழங்க விரும்பினால், இலகுவாக அந்த பி என்பவரை அந்த இடத்திலிருந்து அப்புறப்படுத்துவார்கள். ஏ என்ற நபரை சென்று அந்த காணியை பயன்படுத்துமாறு கூறுவார்கள்'' எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமது சொந்தக் கிராமத்திற்கு திரும்பும் மக்கள் தமது காணிகளை மீளக் கேட்பதாகவும், துரதிஷ்டவசமாக இந்தக் காணிகள் பலவற்றின் உறுதிப்பத்திரங்கள் புலிகளினால் எரிக்கப்பட்டுள்ளதாகவும், காணிகளின் சரியான தகவல்களை அரச தரவுகளில் இருந்து பெற்றுக்கொள்வதில் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்குவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகள் ஆராயப்பட்டு வருவதாக லலித் வீரதுங்க தெரிவித்துள்ளார்.
கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் இறுதி அறிக்கைப் பரிந்துரைகளில் 50 வீதமானவை ஏற்கனவே அமுல்படுத்தப்பட்டுள்ளன. ஏனைய பரிந்துரைகள் தொடர்பில் ஆய்வு நடத்தப்பட்டு வருகின்றது.
இந்த ஆய்வுப் பணிகளில் அரைவாசிப் பணிகள் பூர்த்தியாகியுள்ளன. இந்தப் பரிந்துரைகளை அமுல்படுத்த நீண்ட கால அவகாசம் தேவைப்படும்.
காணிப் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காண முடியாது. போரின் பின்னர் காணிகளுக்கு உரிமை கோரும் பலரிடம் உரிய ஆவணங்கள் கிடையாது. எனவே, இவர்களுக்கு துரித கதியில் தீர்வுகளை வழங்க முடியாது.
இலங்கை ஓர் சுதந்திரமான நாடாகும்.
எவரும் நாட்டுக்குள் பிரவேசித்து காணொளிகளை தயாரிக்க முடியும். இலங்கையின் மெய்யான நிலைமைகளை பார்வையிட முடியும்.
பிரிட்டன் பிரதமர் யாழ்ப்பாணம் செல்ல வேண்டுமென கோரிய போது யாரும் அவரை தடுக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பொதுநவலாய நாடுகள் அரச தலைவர்கள் நிறைவின் பின்னர் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

No comments:
Post a Comment