Friday, November 29, 2013

புலிகளின் முள்ளிவாய்க்கால் விழா: முன்ஜாமின்!

Friday, November 29, 2013
மதுரை::இலங்கை போரில் புலிகள் கொல்லப் பட்டதன் நினைவாக, புலிகளின் உலகத் தமிழர் பேரமைப்பு அறக்கட்டளை சார்பில், தஞ்சாவூர், விளார் கிராமத்தில் "முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம்' அமைக்கப்பட்டுள்ளது.

இதன் துவக்க விழாவில், போலீஸ் அனுமதியை மீறி, இரவு 10 மணிக்கு மேல், மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில், ஒலிபெருக்கியை பயன்படுத்தியதாக, புலிகளின் உலகத் தமிழர் பேரமைப்பு அறக்கட்டளை தலைவர் பழ.நெடுமாறன் மீது, போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

அவரது, முன்ஜாமின் மனுவை விசாரித்த, மதுரை ஐகோர்ட் கிளை நீதிபதி சி.டி.செல்வம் முன்ஜாமின் வழங்கி, உத்தரவிட்டார். மனுதாரர் வக்கீல் அரண்மனைப்பாண்டியன் ஆஜரானார்.

 

No comments:

Post a Comment