Saturday, November 30, 2013

பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவிற்கும் இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித்துக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது!

Saturday, November 30, 2013
இலங்கை::இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித்துக்கும் இடையில் புதுடில்லியில் முக்கிய சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளதாகவும்.
 
இச்சந்திப்பு நேற்று  மாலை புதுடில்லியில் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.  ஆனால் சந்திப்பில் பேசப்பட்ட விடயங்கள் குறித்து எதுவும் தெரியவரவில்லை. 

இலங்கையில் பொதுநலவாய நாடுகள் நடந்து முடிந்ததன் பின் இலங்கை உயர் பொறுப்பில் உள்ள ஒருவர் இந்தியா சென்றுள்ளார். 

இருநாடுகளுக்கிடையிலான உறவுகள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment