Saturday, November 30, 2013

நாங்கள் பிரித்தானியாவின் இறையாண்மை உரிமையை மதிக்கின்றோம்: இதனை போலவே ஏனையோரும் நமது நாடுகளின் இறையாண்மையை மதிக்க வேண்டும்: கிறிஸ் நோனிஸ்!

Saturday, November 30, 2013
இலங்கை::பெரும் எண்ணிக்கையிலான பணய கைதிகளை புலிகளிடம் இருந்து இலங்கை அரசு மீட்டு அவர்களுக்கு மாறுவாழ்வு வழங்கியுள்ளதாக பிரித்தானியாவுக்கான இலங்கையின் உயர்ஸ்தானிகர் கிறிஸ் நோனிஸ் தெரிவித்தார்.
 
பி.பி.சி. தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான நேர்ணாலில் அவர் இதனை கூறினார்.
 
இலங்கையில் மோதல்களுக்கு பின்னர் நல்லிணக்கம, புனர்வாழ்வு மற்றும் மறுசீரமைப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
உள்நாட்டு செயல்முறை மற்றும் சர்வதேச செயல் முறை ஆகியவற்றுக்கு இடையில் இருக்கும் வேறுபாடுகளை வரையறை செய்ய வேண்டும்.
 
நாங்கள் பிரித்தானியாவின் இறையாண்மை உரிமையை மதிக்கின்றோம். இதனை போலவே ஏனையோரும் நமது நாடுகளின் இறையாண்மையை மதிக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.
 
இலங்கை இறையாண்மையுள்ள சுதந்திரமான நாடு. இயற்கையாக நீங்கள் எதிர்பார்க்கும் மரியாதையையே நாங்களும் பிரித்தானியாவிடம் இருந்து எதிர்பார்க்கின்றோம் என கிறிஸ் நோனிஸ் தெரிவித்தார்.
 
 

No comments:

Post a Comment