Friday, November 29, 2013

வட மாகாண முதலமைச்சர் சீ.வீ. விக்னேஸ்வரனுக்கு, அமைச்சர் டக்களஸ் தேவானந்தா அழைப்பு!

Friday, November 29, 2013
இலங்கை::வட மாகாண முதலமைச்சர் சீ.வீ. விக்னேஸ்வரனுக்கு, அமைச்சர் டக்களஸ்  தேவானந்தா  அழைப்பு விடுத்துள்ளார். மாவட்ட அபிவிருத்திக் குழுவில்; முதலமைச்சர் இணைந்து செயற்பட வேண்டுமென அமைச்சர் தேவானந்தா கோரியுள்ளார்.
 
இதற்கு முன்னார் வட மாகாண ஆளுனர் ஜீ.ஏ. சந்திரசிறியுடன் இணைந்து செயற்பட்டதாகவும், தற்போது முதலமைச்சருடன் இணைந்து செயற்பட விரும்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கட்சி பேதங்களை களைந்து மாவட்ட மற்றும் மாகாண மக்களின் நலன்களை கருத்திற் கொண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட வேண்டியது அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மாவட்ட அபிவிருத்திக் குழுவின் ஊடாக வட மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களுக்கும் சேவையாற்ற முடியும் என என அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment