Wednesday, September 11, 2013

அவுஸ்தி­ரே­லி­யாவின் இலங்­கைக்­கான தூதுவர் றொபின் மூடி­யிடம் யாழ்.ஆயர் தோமஸ் சௌந்­த­ர­நா­யகம் ஆண்­டகை சந்திப்பு!


Wednesday, September 11, 2013
இலங்கை::வட­மா­காண சபைத் தேர்­தலின் ஊடாக தமிழ் மக்கள் ஜன­நா­யக ரீதி­யான எண்­ணங்­களை மற்­ற­வர்­க­ளுக்கு வெளிப்­ப­டுத்த முடியும் என்­பதால் இத்­தேர்தல் தமிழ் மக்­களைப் பொறுத்த வரையில் முக்­கி­ய­மா­ன­தொரு தேர்­த­லாகும் என அவுஸ்தி­ரே­லி­யாவின் இலங்­கைக்­கான தூதுவர் றொபின் மூடி­யிடம் யாழ்.ஆயர் தோமஸ் சௌந்­த­ர­நா­யகம் ஆண்­டகை சுட்­டிக்­காட்­டி­யுள்ளார்.
 
வட­மா­காண சபைத் தேர்தல் தொடர்­பான நிலை­மை­களை ஆராய்­வ­தற்­காக நேற்று யாழ்ப்­பா­ணத்­துக்கு வருகை தந்­தி­ருந்த அவுஸ்தி­ரே­லி­யாவின் இலங்­கைக்­கான தூதுவர் றொபின் மூடி யாழ்.ஆயரை அவரின் இல்­லத்தில் சந்­தித்துக் கலந்­து­ரை­யா­டினார்.
 
வடக்கு மாகாண சபைத் தேர்தல் தொடர்­பாக மக்­க­ளு­டைய நிலை­மை­களை அவ­தா­னிப்­ப­தற்­கா­கவும் இத்­தேர்தல் சதந்­தி­ர­மாக நடை­பெ­றுமா என்­பதை அவ­தா­னிப்­ப­தற்­கா­கவும் அவுஸ்தி­ரே­லியத் தூதுவர் யாழ்.குடா­நாட்­டுக்கு வருகை தந்­தி­ருந்தார். அவர் இத்­தேர்தல் சுதந்­தி­ர­மாக நடை­பெ­றுமா-? இத்­தேர்­தலில் மக்­க­ளு­டைய நிலை என்ன?- மக்கள் வாக்­க­ளிப்­பார்­களா-? இத்­தேர்தல் வட­மா­காண மக்­க­ளுக்கு முக்­கி­ய­மா­ன­தொரு தேர்­த­லாக அமை­யுமா? என எம்­மிடம் வினா­வியதாக யாழ் ஆயர் தெரிவித்தார்.  
 
இத்­தேர்தல் மாகாண சபைக்­கான தேர்­த­லாக அமைந்­தாலும் இத்­தேர்­தலின் ஊடாக எமது ஜன­நா­யக உரி­மை­க­ளுக்­கான எண்­ணங்­களை மற்­ற­வர்­க­ளுக்குத் தெரி­யப்­ப­டுத்த முடியும் என்­பதால் இத்­தேர்தல் மக்­க­ளுக்கு முக்­கி­ய­மான தேர்­த­லாக அமையும் என அவுஸ்ரேலியத் தூதுவருக்கு ஆயர் சுட்டிக்காட்னார். 
 
எனவே இத்­தேர்­தலில் சகல மக்­களும் வாக்­க­ளித்து தமக்கு விருப்­ப­மான பிர­தி­நி­தி­களைத் தெரிவு செய்ய வேண்டும் என்­பதே எமது விருப்­ப­மாக அமை­கி­றது என அவ­ரிடம் தெரி­வித்­தி­ருந்தாகவும் அவர்­களும் அத­னையே விரும்­பு­வ­தாக தம்­மிடம் தெரி­வித்­ததாகவும் குற்பிபட்ட ஆயர் குறிப்­பாக சகல நாடு­களும் நடை­பெ­ற­வுள்ள இந்த வட­மா­காண சபைத் தேர்தல் சுமுகமாக நடைபெற வேண்டும் என்பதையே விரும்புகின்றன என மேலும் தெரிவித்தார். 

No comments:

Post a Comment