Wednesday, September 11, 2013

வடமாகாண சபைத் தேர்தலில் தமிழ் தேசியக் புலிகூட்டமைப்பின் சார்பில் போட்டியிடும் புலிகளின் முன்னாள் போராளி எழிலனின் மனைவி அனந்தி பயணித்த வாகனத்தில் மீது கல்வீச்சு தாக்குதல்!

Wednesday, September 11, 2013
இலங்கை::வடமாகாண சபைத் தேர்தலில் தமிழ் தேசியக் புலிகூட்டமைப்பின் சார்பில் போட்டியிடும் புலிகளின் புலிகளின் முக்கிய தளபதிகளில் ஒருவரான எழிலனின் மனைவி அனந்தி பயணித்த வாகனத்தில் மீது கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
 
இனந்தெரியாத நபர்களினால் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு 7.45 மணியளவிலேயே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

பிரச்சார நடவடிககையை முடித்

உந்துருளியில் வந்த இனந்தெரியாத நபர்களே தனது வாகனத்தின் மீது கல்வீச்சு நடத்தியுள்ளதாகவும் இது தொடர்பில் யாழ். பொலிஸ் நிலையத்திலும் தேர்தல் ஆணையாளரிடமும் முறைப்பாடு செய்துள்ளதாக அவர் இன்று புதன்கிழமை தெரிவித்தார்.

துக்கொண்டு திரும்பிக்கொண்டிருந்த வேளையிலேயே யாழ் ஐந்து சந்திப்பகுதியில் கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
 
குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது
 
இன்று யாழ்.நகரப்பகுதி, மாதகல், சுன்னாகம், கொக்குவில் ஆகிய பகுதிகளில் பிரசாரக் கூட்டங்களை நிறைவு செய்து கொண்டு சுழிபுரம்-வழக்கம்பரையில் உள்ள அவரது வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்துள்ளார்.
 
இதன்போது யாழ். நகரத்தை அண்டியுள்ள ஐந்துசந்தி பகுதியில், 9.மணியளவில்  வாகனம் ஒன்று பின்தொடர்ந்து வந்துள்ளது. அந்த வாகனம் அனந்தி பயணித்த வாகனத்தை கடந்து சென்ற சில நிமிடங்களில் திடீரென பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் ஒன்று பாரிய கற்களை அனந்தியின் இருக்கையை நோக்கி வீசியுள்ளது. எனினும் அவர் சுதாகரித்துக் கொண்ட நிலையில் காயங்கள் இன்றி தப்பித்துள்ளார்.
 
தாக்குதலின் பின்னர் தாக்குதலாளிகள் தப்பிச் சென்ற நிலையில் அனந்தி பாதுகாப்பாக வீடு சென்றுள்ளார். எனினும் கற்கள் வீசப்பட்டத்தில் வாகனம் சிறிய சேதத்திற்குள்ளாகியிருக்கின்றது.

No comments:

Post a Comment