Wednesday, September 11, 2013

இன­வா­தத்தை தூண்டி விட்டு தமிழ் இளைஞர், யுவ­தி­க­ளுக்கு சயனைட் வில்­லை­களைக் கொடுத்து வடக்கை மீண்டும் கல­வர பூமி­யாக்க கூட்­ட­மைப்பு முயற்­சி: சுசில் பிரே­ம­ஜ­யந்த!

Tuesday, September 10, 2013
இலங்கை::தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பின் தேர்தல் விஞ்­ஞா­பனம் வட்­டுக்­கோட்டை தீர்­மா­னத்தை பிர­தி­ப­லிக்கும் வகை­யி­லேயே அமைந்­துள்­ளது. இன­வா­தத்தை தூண்டி விட்டு தமிழ் இளைஞர், யுவ­தி­க­ளுக்கு சயனைட் வில்­லை­களைக் கொடுத்து வடக்கை மீண்டும் கல­வர பூமி­யாக்க கூட்­ட­மைப்பு முயற்­சிக்­கக்­கூ­டாது என்று அர­சாங்கம் குறிப்­பிட்­டுள்­ளது.
 
தேர்தல் விஞ்­ஞா­ப­னத்தின் மூலம் இந்­தியா உள்­ளிட்ட சர்­வ­தே­சத்தை திருப்­திப்­ப­டுத்­து­வதால் வடக்­கிற்கோ நாட்­டிற்கோ, எவ்­வி­த­மான பயனும் ஏற்­ப­டப்­போ­வ­தில்லை. எவ்­வா­றா­யினும் வடக்கில் இன­வாத பிரி­வி­னை­வாத கொள்­கை­களை பரப்பும் குழுக்­க­ளுக்கு எதி­ராக பொது­மக்கள் வாக்­க­ளிக்க வேண்டும். தென்­னி­லங்கை மக்கள் மிகவும் பொறு­மை­யுடன் செயற்­ப­ட­வேண்டும். தேர்­தலில் வெற்றி பெற ஆளும் கட்­சிக்கு இரா­ணு­வத்­தினர் உத­வி­களோ ஒட்­டுக்­கு­ழுக்­களின் ஆத­ரவோ தேவை­யில்லை.
 
அர­சாங்­கத்­திற்கு விரல் நீட்டும் நவ­நீ­தம்­பிள்ளை உள்­ளிட்ட ஏனைய தரப்­பினர் முப்­ப­தாண்டு கால யுத்­தத்தின் போது புலி­க­ளினால் மேற்­கொள்­ளப்­பட்ட பயங்­க­ர­வாத நட­வ­டிக்­கை­களை ஞாப­கப்­ப­டுத்­திக்­கொள்­ள­வேண்டும் என்றும் அர­சாங்கம் சுட்­டிக்­காட்­டி­யுள்­ளது.
 
ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் விசேட செய்­தி­யாளர் மாநாடு நேற்று செவ்­வாய்க்­கி­ழமை ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்­சியின் தலை­மை­ய­கத்தில் இடம்­பெற்ற போதே மேற்­கண்­ட­வாறு தெரி­விக்­கப்­பட்­டது. இதன் போது உரை­யாற்­றிய முன்­ன­ணியின் பொதுச் செய­லா­ளரும் அமைச்­ச­ரு­மான சுசில் பிரே­ம­ஜ­யந்த கூறு­கையில்:
 
ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ இன்று முதல் வடக்கு தேர்தல் பிர­சார கூட்­டங்­களில் கலந்­து­கொள்வார். சர்­வ­தேச நாடுகள் வட­மா­காண சபை தேர்தல் தொடர்பில் கூடிய அவ­தானம் செ
லுத்­தி­யுள்­ளன. அதே­போன்று பல குழுக்கள் உள்­நாட்­டிலும் வெளி­நா­டு­க­ளிலும் இருந்து கொண்டு இலங்­கைக்கு எதி­ராக பல்­வேறு நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­கின்­றன. அரச ஊழி­யர்­களை தேர்தல் நட­வ­டிக்­கை­களில் ஈடு­ப­டுத்­து­வ­தா­கவும் குற்றம் சுமத்­து­கின்­றன.
 
வடக்கில் ஆளும் கட்சி உண்­மையைக் கூறி தேர்தல் பிர­சா­ரங்­களில் ஈடு­ப­டு­கின்­றது. 30 ஆண்டு கால யுத்­தத்தை முடி­விற்கு கொண்டு வந்து நாட்டை அமை­தி­யாக்கி வடக்கு மக்­க­ளுக்கு அனைத்து அடிப்­படை உத­வி­க­ளையும் அர­சாங்கம் செய்­துள்­ளது. இதில் ஒரு பகு­திக்­கேனும் தமிழ்த்­தே­சி­யக்­கூட்­ட­மைப்பு ஒத்­து­ழைப்பு வழங்­க­வில்லை. இன்னும் 1971 ஆம் ஆண்டில் மேற்­கொள்­ளப்­பட்ட வட்­டுக்­கோட்டை பிர­க­ட­னத்­தி­லேயே கூட்­ட­மைப்பு தங்­கி­யுள்­ளது.
தமிழ்த்­தே­சி­யக்­கூட்­ட­மைப்பு மீண்டும் வட்­டுக்­கோட்டை பிர­க­ட­னத்தை கையில் தூக்கிக் கொண்டு வடக்கில் தேர்தல் பிர­சா­ரங்­களில் ஈடு­ப­டு­கின்­றது. இதனை தோல்­வி­ய­டையச் செய்யும் போராட்­டத்தை முன்­னெ­டுத்­தி­ருக்­கிறோம்.
 
தேர்தல் நட­வ­டிக்­கைக்­காக அனைத்­தையும் காட்­டிக்­கொ­டுக்க கூட்­ட­மைப்பு முயற்­சிக்­கக்­கூ­டாது. இன­வா­தத்தை தூண்டி விட்டு வடக்கில் இளைஞர், யுவதிகளை தூண்டிவிட்டு அங்கு மீண்டும் கலவரத்தை ஏற்படுத்த கூட்டமைப்பு முயற்சிக்கக்கூடாது
 
2006 ஆம் ஆண்டு மீண்டும் ஒஸ்லோ தீர்மானத்தை அடிப்படையாகக் கொண்டு தான் தேர்தல் விஞ்ஞானபனத்தை தயாரித்ததாக கூட்டமைப்பு கூறுவது வேடிக்கையாக உள்ளது. ஏனென்றால் 2009 ஆம் ஆண்டின் அனைத்து கேள்விகளுக்கும் அரசாங்கம் பதிலளித்து தற்போது புதிய நோக்குடன் செயற்படுகின்றது எனக்கூறினார்.

No comments:

Post a Comment