இலங்கை::வடக்கு மக்களுக்கு ஆரம்பம் மறந்து போயுள்ளதாக பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
மினுவாங்கொடையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர் வட மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் இந்த கருத்தை முன்வைத்துள்ளார்
ஜனாதிபதி வடக்கின் வசந்தத்தை செயற்படுத்தியமையானது, பொதுமக்களின் நன்மையை கருத்தில் கொண்டு அவர்களுக்கு வசந்தத்தை ஏற்படுத்துவதற்காகவாகும். அன்றி அரசாங்கத்திற்கோ, ஆளும் கூட்டமைப்பு கட்சிக்கோ வசந்தத்தை ஏற்படுத்துவதற்காகவோ, வாக்குகளை பெறுவதற்காகவோ அல்ல.
ஆனால், சிலர் கேட்கிறார்கள் வடக்கின் வசந்தத்தை நடைமுறைப்படுத்தி ஏன் மக்கள் வாக்களிக்க வில்லை என்று. அது வடக்கு மக்களின் தீர்மானமாகும், அவர்களுக்கு ஆரம்பம் மறந்து போயுள்ளது என்றால், கடந்த 5 வருடங்களுக்கு முன்னர் இருந்த நிலைமை மறந்து விட்டதென்றால், அது ஜனாதிபதியின் தவறு அல்ல..
அடிப்படைவாதம், உணர்ச்சிபூர்வமான கருத்துக்கள், தனியாட்சி என்பனவற்றை மீள ஏற்படுத்துவதாக தெரிவிக்கப்பட்ட கருத்துகளை செவிமடுத்தபின்னர் அவர்கள் இந்த தீர்மானத்தை எடுத்திருக்கலாம்.
மினுவாங்கொடையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர் வட மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் இந்த கருத்தை முன்வைத்துள்ளார்
ஜனாதிபதி வடக்கின் வசந்தத்தை செயற்படுத்தியமையானது, பொதுமக்களின் நன்மையை கருத்தில் கொண்டு அவர்களுக்கு வசந்தத்தை ஏற்படுத்துவதற்காகவாகும். அன்றி அரசாங்கத்திற்கோ, ஆளும் கூட்டமைப்பு கட்சிக்கோ வசந்தத்தை ஏற்படுத்துவதற்காகவோ, வாக்குகளை பெறுவதற்காகவோ அல்ல.
ஆனால், சிலர் கேட்கிறார்கள் வடக்கின் வசந்தத்தை நடைமுறைப்படுத்தி ஏன் மக்கள் வாக்களிக்க வில்லை என்று. அது வடக்கு மக்களின் தீர்மானமாகும், அவர்களுக்கு ஆரம்பம் மறந்து போயுள்ளது என்றால், கடந்த 5 வருடங்களுக்கு முன்னர் இருந்த நிலைமை மறந்து விட்டதென்றால், அது ஜனாதிபதியின் தவறு அல்ல..
அடிப்படைவாதம், உணர்ச்சிபூர்வமான கருத்துக்கள், தனியாட்சி என்பனவற்றை மீள ஏற்படுத்துவதாக தெரிவிக்கப்பட்ட கருத்துகளை செவிமடுத்தபின்னர் அவர்கள் இந்த தீர்மானத்தை எடுத்திருக்கலாம்.

No comments:
Post a Comment