Thursday, September 19, 2013

வட மாகாண சபைத் தேர்தலை முன்னிட்டு பாதுகாப்பு நடவடிக்கைகளை பலப்படுத்தும் வகையில் அனைத்து பொலிஸ் நிலையங்களும் உஷார் நிலையில்!

Thursday, September 19, 2013
இலங்கை::வட மாகாண சபைத் தேர்தலை முன்னிட்டு பாதுகாப்பு நடவடிக்கைகளை பலப்படுத்தும் வகையில் அனைத்து பொலிஸ் நிலையங்களும் உஷார் நிலையில் காணப்படுகின்றன.

யாழ்ப்பாணத்தில் உள்ள அனைத்து வாக்களிப்பு நிலையங்களுக்கும் பொலிஸ் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்க் கொள்வதற்க்கும் மற்றும் ரோந்து நடவடிக்கைகள் உட்பட ஏனைய நடவடிக்கைகளுக்கும் வட மாகாணத்தில் உள்ள பொலிசார் பற்றாக் குறையான நிலை

யாழ். மாவட்ட பொலிஸ் நிலையங்களில் போதிய வாகன வசதிகள் அற்ற நிலையில் தனியார் வாகனங்களையும் வாடகை அடிப்படையில் பெற்று பயன்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

நாளை வெள்ளிக்கிழமை வாக்களிப்பு நிலையங்களுக்கு வாக்குப் பெட்டிகளுடன் சிரேஷ்ட தலைமைதாங்கும் அலுவலர்களுடன் உரிய வாக்களிப்பு நிலையங்களுக்கு பொலிசார் அனுப்பப்படவுள்ளதுடன் வாக்களிப்பு நிலையங்கள் அமைந்துள்ள பகுதிகளில் அதிகளவான ரோந்து நடவடிக்கைகளும் கண்காணிப்புக்களும் மேற்க்கொள்வதற்கான ஒழுங்குகளும் பொலிசாரினால் மேற்கொள்ளப்படவுள்ளன.
யில் தென்னிலங்கையில் இருந்து கொண்டு வரப்பட்ட பொலிசாரும் மேலதிக கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளளர்.

No comments:

Post a Comment