Tuesday, September 10, 2013
இலங்கை::இலங்கையில் பயங்கரவாதத்தை அழிப்பதற்கு இந்தியா உதவி செய்தது ராஜீவ் காந்தியை கொலை செய்த புலிகளை நாமே ஒழித்தோம் எனவே இரு நாட்டு உறவை தமிழ் நாட்டு அரசியல்வாதிகளால் இல்லாது செய்து விட முடியாது என்று சமூக, ஒருமைப்பாடு மற்றும் தேசிய மொழிகள் தொடர்பான அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.
இலங்கை::இலங்கையில் பயங்கரவாதத்தை அழிப்பதற்கு இந்தியா உதவி செய்தது ராஜீவ் காந்தியை கொலை செய்த புலிகளை நாமே ஒழித்தோம் எனவே இரு நாட்டு உறவை தமிழ் நாட்டு அரசியல்வாதிகளால் இல்லாது செய்து விட முடியாது என்று சமூக, ஒருமைப்பாடு மற்றும் தேசிய மொழிகள் தொடர்பான அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.
தமிழ் நாட்டில் உள்ள மக்கள் செல்வாக்கற்ற அரசியல் கட்சிகளே இரு நாடுகளுக்கு இடையேயும் மோதல்களை ஏற்படுத்த முயற்சிக்கின்றன என்றும் அமைச்சர் குற்றம் சாட்டினார்.
இலங்கையுடனான நல்லுறவை முறித்துக் கொள்ள வேண்டுமென புதிய கம்யூனிஸ்ட் கட்சி கூறவில்லை. அதன் தமிழ் நாட்டு மாநில செயலாளரான பாண்டியனே தெரிவித்துள்ளார். எனவே இது பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டிய விடயம் அல்ல. தமிழ் நாட்டில் உள்ள மக்கள் செல்வாக்கு இல்லாத அரசியல் கட்சியினர். காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசாங்கத்தை நெருக்கடியில் தள்ளுவதற்கே முயற்சிகளை மேற்கொள்கின்றன எனவும் தெரிவித்தார்.
யுத்தத்தை முடிவிற்கு கொண்டு வர இந்தியா உதவியது. அதே போன்று ராஜீவ் காந்தியை கொலை செய்த புலிகளை இலங்கையே அழித்தது. எனவே இரு நாடுகளுக்கும் இடையே நட்புறவில் எவ்விதத்திலும் விரிசல் ஏற்படப் போவதில்லை என்றும் இந்தியாவில் தேர்தல் நெருங்கி வருவதால் ஆட்சியமைக்கக்கூடிய பலம் உள்ள காங்கிரஸை நெருக்கடியில் தள்ளுவதே தமிழ் நாட்டு அரசியல்வாதிகளின் நோக்கமாகும் என்றும் குறிப்பிட்டார்.
இந்தியா இலங்கை இரண்டு நாடுகளுக்கு இடையேயான கடல் எல்லை பாதுகாப்பு தொடர்பில் இந்தியாவிற்கு கடப்பாடு உள்ளது. எனவே அப்பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காகவே கடலோரப் பாது காப்பிற்காக எமக்கு இந்தியா கப்பல்களை வழங்கியுள்ளது என்றும் அமைச்சர் வாசு தேவ நாணயக்கார தெரிவித்தார்.

No comments:
Post a Comment