Monday, September 16, 2013

தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு முன்­வைத்­துள்ள இன­வாத மற்றும் பிரி­வி­னை­வாத செயற்­பா­டு­களை சர்­வ­தேச மட்­டத்தில் தோற்­க­டிப்­ப­தற்கு அரசுக்கு அங்கீகாரம் வழங்க வேண்டும்: பஷில் ராஜ­பக்ஷ!

Monday, September 16, 2013
இலங்கை::வட மாகாண சபைத் தேர்­தலின் ஊடாக தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு முன்­வைத்­துள்ள இன­வாத மற்றும் பிரி­வி­னை­வாத செயற்­பா­டு­களை சர்­வ­தேச மட்­டத்தில் தோற்­க­டிப்­ப­தற்கு வடமேல் மற்றும் மத்­திய மாகாண மக்கள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க் ஷவின் அர­சாங்­கத்­துக்கு இந்தத் தேர்­தலின் ஊடாக பாரிய அங்­கீ­கா­ரத்தை வழங்­க­வேண்டும் என்று பொரு­ளா­தார அபி­வி­ருத்தி அமைச்­சரும் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் தேசிய அமைப்­பா­ள­ரு­மான பஷில் ராஜ­பக் ஷ தெரி­வித்தார்.
 
ஒரு­வேளை வட மாகாண சபைத் தேர்­தலில் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு வெற்­றி­பெற்றால் அதனை தனி ஈழம் ஒன்றை அமைக்க மக்கள் வழங்­கிய ஆணை­யாக சர்­வ­தே­சத்­துக்கு கூட்­ட­மைப்பு எடுத்­துக்­கூறும் சந்­தர்ப்பம் காணப்­ப­டு­கின்­றது. எனவே கூட்­ட­மைப்பு முன்­வைத்­துள்ள இன­வாத மற்றும் பிரி­வி­னை­வா­தத்தை நிரா­க­ரிப்­ப­தற்கு ஆளும் கட்­சியை வடமேல் மற்றும் மத்­திய மாகா­ணங்­களில் உயர்ந்த மட்­டத்தில் வெற்­றி­பெ­ற­வைக்­க­வேண்டும் என்றும் அவர் குறிப்­பிட்டார்.

No comments:

Post a Comment