Friday, September 6, 2013

தமிழ் தேசிய கூட்­ட­மைப்பு புலிகளின் தனித்­தமிழ் ஈழத்­திற்­கான மோதலை ஆரம்­பிக்கும் அதன் வெளிப்­பாடே அவர்­க­ளது தேர்தல் விஞ்­ஞா­பனம்: தேசப்­பற்­றுள்ள தேசிய இயக்கம்!

Friday, September 06, 2013
இலங்கை::வட மாகாண சபை தேர்தல் முடிந்த பின்னர் தமிழ் தேசிய கூட்­ட­மைப்பு தனித்­தமிழ் ஈழத்­திற்­கான மோதலை ஆரம்­பிக்கும் அதன் வெளிப்­பாடே அவர்­க­ளது தேர்தல் விஞ்­ஞா­பனம் என்று தேசப்­பற்­றுள்ள தேசிய இயக்கம் தெரி­வித்­தது.
அர­சாங்கம் இந்த ஆபத்தை கண்­டு­கொள்­ளாது, ‘‘சீட்­டாட்டம்’’ ஆடு­கி­றது என்றும் அந்த இயக்கம் தெரி­வித்­தது.

இது தொடர்­பாக தேசப்­பற்றுள்ள தேசிய இயக்­கத்தின் பொது செய­லாளர் டாக்டர் வசந்த பண்­டார மேலும் தெரி­விக்­கையில்

அன்­றைய வட்­டுக்­கோட்டை புலிகளின் தனி நாட்டு பிர­க­ட­னத்தை விட இன்று கூட்­ட­மைப்பின் வட மாகாண சபை தேர்தல் விஞ்­ஞா­பனம் மாற்றம் அடைந்­துள்­ளது. ஒற்றை ஆட்­சியை ஏற்றுக் கொள்­வ­தா­கவும் அதன் கீழ் தமக்கு தன்­னாட்சி அதி­காரம் தேவை என்றும் வலி­யு­றுத்தி உள்­ளது.

இது மறைக்­கப்­பட்ட புலிகளின் தனி தமி­ழீ­ழத்­திற்­கான நிகழ்ச்சி நிர­லாகும். இதன் மூலம் சிங்­கள மக்­க­ளையும் சர்­வ­தே­சத்­தையும் ஏமாற்ற முயற்­சிக்­கின்­றனர்.

கூட்­ட­மைப்பின் தேர்தல் விஞ்­ஞா­ப­ன­மா­னது புதிய பிரி­வினை வாதத்­திற்­கான பிர­வேசம் ஆகும். ஒற்­றை­யாட்­சியின் கீழ் தன்­னாட்சி அதி­காரம் என்­ப­தற்கு இடமே இல்லை.

வட மாகாண சபை தேர்­த­லுக்கு பின்னர் அர­சாங்கம் 13 ஆவது திருத்­தத்தில் திருத்­தங்­களை மேற்­கொள்ளா வண்ணம் தடுப்­ப­தற்கும் இதன் ஊடாக முயற்­சிக்­கப்­ப­டு­கின்­றது. ஏனென்றால் தேர்­தலில் கூட்­ட­மைப்பு வெற்றி பெற்றால் தன்­னாட்சி அதி­கா­ரத்­திற்கும் 13ஆவது திருத்­தத்­திற்­குமே மக்கள் தமக்கு ஆணை வழங்­கினர் என்று பிர­சா­ரத்தை கூட்­ட­மைப்பு சர்­வ­தேச ரீதியில் முன்­னெ­டுக்கும்.

அத்­தோடு அதற்­கான ஆத­ர­வையும் கோரும். இச்­சந்­தர்ப்­பத்தில் அர­சாங்­கத்­திற் கும் கூட்­ட­மைப்­பிற்கும் இடையே அர­சியல் அமைப்பு ரீதி­யான மோதல் ஆரம்­பிக்கும் அது நாட்­டுக்கு மிகவும் ஆபத்­தா­ன­தாகும். ஆனால், அரச தரப்பில் சிலர் இதனை புரிந்து கொள்­ளாது 13ஆவது துருப்பு சீட்டை எதிர்­கா­லத்தில் முன்­னெ­டுப்போம் என கூறு­கின்­றனர்.

இவர்கள் நாட்டின் பாது­காப்­போடு சீட்­டாட்டம் நடத்­து­கின்­றனர். நவ­நீ­தம்­பிள்ளை இலங்கை வரும் போதும் அவர் எமக்கு சார்­பாக கருத்­துக்­களை தெரி­விப்பார் என கூறினர். அவ­ருக்கு அனைத்து வச­தி­க­ளையும் செய்து கொடுத்­தனர். ஆனால், இறு­தியில் அவர் நாட்­டுக்கு எதி­ரான கருத்துக்களை கூறி விட்டு வெளியேறி விட்டார்.

எனவே, நாடு எதிர்நோக்கும் ஆபத்து தொடர்பாக மக்களை தெளிவுபடுத்தும் நடவடிக்கைகளை முன்னெடுக்கப் போவதாகவும் டாக்டர் வசந்த பண்டார தெரிவித்தார்.

No comments:

Post a Comment