Sunday, September 15, 2013

நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளின் படி, இலங்கையில் நிரந்தர தீர்வு ஒன்றை முன்வைக்க வேண்டும்: அமெரிக்கா!

Sunday, September 15, 2013
நியூயார்க்::கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளின் படி, இலங்கையில் நிரந்தர தீர்வு ஒன்றை முன்வைக்க வேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.

த வொய்ஸ் ஒப் அமெரிக்கா இணையத்தளத்தின் இன்றைய ஆசிரியர் தலையங்கத்தில் இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அண்மையில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்தமையை அமெரிக்கா வரவேற்றுள்ளது.
இலங்கை அரசாங்கம் தம்மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பில் உரிய வகையில் பதில் வழங்க கடமைப் பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment