Saturday, September 14, 2013

விரைவில் அமைச்சரவை மாற்றம்; புதிய பிரதமராக பவித்ரா வண்ணியராச்சி?.

Saturday,September,14, 2013
இலங்கை::மத்திய, வயம்ப மற்றும் வடக்கு மாகாண சபைகளுக்கான தேர்தல்கள் முடிந்த பின்னர் அமைச்சரவை மாற்றமொன்று நடைபெறவுள்ளதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இம்மாற்றத்தின் போது பிரதம மந்திரி பதவி அமைச்சர் பவித்ரா வண்ணியராச்சிக்கு வழங்கப்படலாம் என  ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இம்மாற்றத்தின் நோக்கம் கொழும்பில் நடைபெறவுள்ள பொது நலவாய மாநாடு கூட்டத் தொடரை ஒழுங்குபடுத்துதல் மற்றும் வெளிநாட்டுத் தலைவர்களுக்கான வரவேற்பு ஒழுங்குகளை செய்யும் முகமாக உடனடியாக மிகவும் ஆற்றல் உள்ள வேலை செய்யக் கூடிய பிரதம மந்திரி தேவைப்படுவதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரவிக்கின்றன.

No comments:

Post a Comment