Sunday, August 25, 2013
இலங்கை::தமிழ்த் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்களான வடமராட்சி பிரதேச சபை உபதலைவர் இ. சாந்தசொரூபன் மற்றும் பருத்தித்துறை பிரதேச சபை உபதலைவர் எம். லோகசிங்கம் ஆகியோர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்துகொண்டுள்ளனர். இவர்கள் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களைச் சந்தித்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அங்கத்துவப் பத்திரத்தைப் பெற்றுக்கொண்டனர். அமைச்சர்கள் பஷில் ராஜபக்ஷ, சுசில் பிரேமஜயந்த, அதாவுத செனவிரட்ண ஆகியோர் உட்பட முக்கியஸ்தர்களையும் படத்தில் காணலாம். (படம்: சுதத் சில்வா)

No comments:
Post a Comment