Wednesday, August 28, 2013

அமெரிக்கத் தூதுவர் மிச்சல் ஜே சிசன், சமூக நீதிக்கான தேசிய அமைப்பின் அழைப்பாளர் மாதுலுவே சோபித தேரரை சந்தித்து பேச்சுவார்த்தை!

Wednesday, August 28, 2013
இலங்கை::அமெரிக்கத் தூதுவர் மிச்சல் ஜே சிசன், சமூக நீதிக்கான தேசிய அமைப்பின் அழைப்பாளர் மாதுலுவே சோபித தேரரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். கோட்டே நாக விஹாரைக்கு விஜயம் செய்த சிசன், சோபித தேரரை சந்தித்துள்ளார்.
 
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையின் பாதக நிலைமைகளை சோபித தேரர் விளக்கியுள்ளார். நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையினால் மக்களுக்கு ஏற்படக் கூடிய பாதிப்புக்கள் குறித்தும் தெளிவுபடுத்தியுள்ளார்.
17ம் திருத்தச் சட்டத்தை மீள அமுல்படுத்துவதன் மூலம் நாட்டில் நல்லாட்சியை ஏற்படுத்த முடியும் என சோபித தேரர் சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments:

Post a Comment