Thursday, August 22, 2013

புலி­களின் தமி­ழீழ கனவு இன்னும் உயி­ரு­ட­னேயே உள்­ளது: தப்­பிச்­சென்ற புலிகள் சர்­வ­தேச நாடு­களில் தஞ்சம் அடைந்து இலங்­கைக்கு எதி­ராக பல்­வேறு சூழ்ச்­சி­களை செய்­கின்­றனர்: ஜெனரல் ஜகத் ஜய­சூ­ரிய!

Thursday, August 22, 2013
இலங்கை::புலி­களின் தமி­ழீழ கனவு இன்னும் உயி­ரு­ட­னேயே உள்­ளது. தப்­பிச்­சென்ற புலிகள் சர்­வ­தேச நாடு­களில் தஞ்சம் அடைந்து இலங்­கைக்கு எதி­ராக பல்­வேறு சூழ்ச்­சி­களை செய்­கின்­றனர். அதில் ஒன்­றுதான் பொது­ந­ல­வாய மாநாட்­டிற்கு எதி­ரான செயற்­பா­டுகள் என்று பாது­காப்பு படை­களின் தலைமை அதி­காரி ஜெனரல் ஜகத் ஜய­சூ­ரிய தெரி­வித்தார்.

இலங்கை இரா­ணு­வத்­திற்கு எதி­ரான போர்க் குற்­றச்­சாட்­டுகள் குறித்து ஐ.நா. மனித உரி­மைகள் ஆணை­யாளர் நவ­நீ­தம்­பிள்­ளைக்கு பதி­ல­ளிப்போம். புலம்­பெ­யர்ந்த தமி­ழர்­களே இலங்­கைக்கு எதி­ரா­கவும் இரா­ணு­வத்­திற்கு எதி­ரா­கவும் போலி­யான பிர­சா­ரங்கள் மேற்­கொள்­கின்­றனர். இந்­ந­ட­வ­டிக்­கைகள் தொடர்பில் புல­னாய்வு தக­வல்கள் கிடைத்­துள்­ளன என்றும் அவர் குறிப்­பிட்டார்.
 
சிறி­மாவோ பண்­டா­ர­நா­யக்க சர்­வ­தேச மாநாட்டு மண்­ட­பத்தில் அமைந்­துள்ள பாது­காப்பு படை­களின் தலை­மைக்­கா­ரி­யா­லய அலு­வ­ல­கத்தில் நேற்று புதன்­கி­ழமை நடை­பெற்ற விஷேட செய்­தி­யாளர் மாநாட்டின் போதே ஜெனரல் ஜகத் ஜய­சூ­ரிய மேற்­கண்­ட­வாறு கூறினார்.
 
இவர் இங்கு தொடர்ந்தும் உரை­யாற்­று­கையில்:-
எதிர்­வரும் காலங்கள் இலங்­கைக்கு மிகவும் முக்­கி­ய­மா­ன­தாகும். ஏனெனில் பொது­ந­ல­வாய மாநாடு, நவ­நீ­தம்­பிள்­ளையின் வருகை, வட­மா­காண சபைத் தேர்தல் மற்றும் ஐ.நா. மனித உரி­மைகள் அமர்வு என்­பன இலங்­கைக்கு முக்­கி­ய­மா­ன­தொன்­றாகும். அர­சி­யலை விட நாட்டின் பாது­காப்பே முக்­கி­ய­மா­ன­தாகும்.  புலி­களை ஆயுத முனையில் தோல்­வி­யடையச் செய்தோம். ஆனால், அவர்­களின் தமி­ழீழ இலக்கு இன்னும் தோல்­வி­ய­டை­ய­வில்லை. உயி­ரு­ட­னேயே உள்­ளது.
 
தப்­பித்துச் சென்ற  புலிகள் சர்­வ­தேச நாடு­களில் தஞ்­ச­ம­டைந்து இலங்­கைக்கு எதி­ராக பல்­வேறு நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுக்­கின்­றனர். தமி­ழீழ இலக்கை அடைய எந்­த­ள­விற்கு செயற்­பட முடி­யுமோ அந்த எல்­லை­க­ளையும் கடந்­துள்­ளனர். நாடு கடந்த தமி­ழீழ அரசும் அதன் வெளிப்­பாடே. இவர்­களின் பிர­தான நோக்கம் தற்­போ­தைய ஆட்­சியை மாற்றி, அர­சியல் ரீதி­யாக தமது இலக்­கு­களை அடை­வ­தாகும். அதே­போன்று பொது­ந­ல­வாய மாநாட்டை குழப்­பு­வது என்­ப­னவும் இவர்­களின் நிகழ்ச்சி நிரலில் ஒன்று.
 
இது குறித்து பல்­வேறு புல­னாய்வு அறிக்­கைகள் கிடைத்­துள்­ளன. ஆகவே, ஊட­க­வி­ய­லா­ளர்கள் நாட்டின் தேசிய பாது­காப்­பிற்கு முக்­கி­யத்­துவம் கொடுத்து செயற்­பட வேண்டும். போர்க் குற்றங்கள் தொடர்பில் பதிலளிப்போம். ஆனால், குழப்பகரமான சூழலில் பாதுகாப்பு துறையினரின் கெளரவம் குறையும் வகையில் செய்திகளை வெளியிடக் கூடாது. ஏனெனில் அது எதிரிகளுக்கு தமது இலக்குகளை அடைய சாதகமாகி விடும் எனக் கூறினார்.

No comments:

Post a Comment