Saturday, August 31, 2013

புலிகள் அமைப்பை பயங்கரவாதிகள் என்று கருத முடியாது: தமிழ் தேசிய (புலி)கூட்டமைப்பின் முதன்மை வேட்பாளர் சீ.வி.விக்னேஸ்வரன்!

Saturday, August 31, 2013
இலங்கை::புலிகள் அமைப்பை பயங்கரவாதிகள் என்று கருத முடியாது:  தமிழ் தேசிய (புலி)கூட்டமைப்பின் முதன்மை வேட்பாளர் சீ.வி.விக்னேஸ்வரன்!

புலிகள் அமைப்பை பயங்கரவாதிகள் என்று கருத முடியாது என்று, வடமாகாணத்துக்கான தமிழ் தேசிய (புலி)கூட்டமைப்பின் முதன்மை வேட்பாளர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

எமது செய்திப்பிரிவுடன் இடம்பெற்ற தொலைபேசி உரையாடலின் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

சட்ட ரீதியாக  புலிகளை பயங்கரவாதிகள் என்று கூறமுடியாது.

தமிழ் மக்களுக்கு எதிரான அடக்கு முறைகளுக்கு எதிராக போராட்டம் நடத்தி  புலிபோராளிகளாகவே அவர்களை தாம் பார்ப்பதாக சீ.வீ.விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையில் தமிழர்களின் பிரச்சினையை அறிந்த ஒரே கட்சி தமிழ் தேசிய (புலி)கூட்டமைப்பு எனவும், இதன் காரணமாகவே தமிழர்களுக்காக செயற்பட தமிழ் தேசிய (புலி)
கூட்டமைப்பை தெரிவு செய்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment