Saturday, August 24, 2013

மீண்டும் ஒரு பயங்கரவாதம் இந்த நாட்டில் தலை தூக்க அனுமதிக்கமுடியாது: யாழ் மாவட்ட படைகளின் கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் மகிந்த ஹத்துருசிங்க!

Saturday, August 24, 2013
இலங்கை::மக்களுடைய சொத்துக்களை புலிகள் பறித்து வைதிருந்த காலத்திலும், படையினர் வைத்திருந்த காலத்திலும் மக்கள் பட்ட துயரங்களை நான் நன்கு உணர்ந்துள்ளளேன்.
 
இந்த வகையில் மக்களுடைய வீடுகள் காணிகள் இன்று மீள கையளிக்கப்படும் நிலையில் அவர்களுடைய மகிழ்ச்சியையும் புரிந்துகொண்டுள்ளேன். என யாழ் மாவட்ட படைகளின் கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் மகிந்த ஹத்துருசிங்க குறிப்பிட்டுள்ளார்.
 
வலிகாமம் பகுதியில் படையினர் நிலை கொண்டுள்ள விடுகள் காணிகளை கையளிக்கும் நிகழ்’வு சுன்னாகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை பிற்பகல் இடம் பெற்றது.
 
இந்நிகழ்வில் தொடர்ந்து உரை
தென்னிலங்கையில் வாழும் எனது மகளோ மகனோ நல்ல சூழலில் சமாதானமாகவும் நிம்மதியாகவும் சந்தோஷமாகவும் வாழ முடியுமாக இருந்தால் வட மாகாணத்தில் வாழும் பிள்ளைகளும் இதே நிலையில் வாழ வேண்டும்.
யாற்றிய யாழ் மாவட்ட படைகளின் கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் ஹத்துருசிங்க,
 
கடந்த காலத்தில் 1995 ம் ஆண்டின் பின்னர் நாம் பல நூற்றுக்கணக்கான வீடுகளையும் இடங்களையும் பிடித்து வைத்திருந்தோம்.மக்களுடைய அமைதியான வாழ்வுக்கும் பெறப்பட்ட நிம்மதியை மீண்டும் புலிகள் குழப்பாமல் பாதுகாக்க வேண்டும் என்பதற்க்காக இதனை நாம் படிப்படியாக பொது மக்களிடம் கடந்த காலத்தில் கையளித்து வந்துள்ளோம்.
அன்று 2009 ம்ஆண்டுக்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் 29 ஆயிரத்தி நாநூறு  படையினர் நிலை கொண்டு இருந்தார்கள்.தற்போது  13 ஆயிரத்தி நூறு படையினரே நிலை கொண்டுள்ளார்கள். படையினரின் எண்ணிக்கையும் கூட படிப்படியாக குறைக்கப்பட்டுள்ளது.
 
மீண்டும் ஒரு பயங்கரவாதம் இந்த நாட்டில் தலை தூக்க அனுமதிக்கமுடியாது.தமிழன் சிங்களவன் முஸ்லீம் என்ற இன மத வேறுபாடுகளைக் கடந்து ஒரேநாடு ஓரே மக்கள் என்ற அடிப்படையில் நாம் அனைவரும் ஒற்றுமையாக வாழ வேண்டும் எனவும் குறிப்பிட்டார்

No comments:

Post a Comment