Wednesday, August 21, 2013
இலங்கை::வடக்கு, மத்திய மற்றும் வடமேல் மாகாண சபைகளுக்கான தேர்தல் தொடர்பில் 149 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன.
இவற்றுள் தேர்தல் வன்முறைகள் குறித்து 10 முறைப்பாடுகளும், தாக்குதல் சம்பவங்கள் தொடர்பில் 9 முறைப்பாடுகளும் அடங்குகின்றன.
குருநாகல் மாவட்டத்திலேயே கூடுதலான வன்முறைகள் பதிவாகியுள்ளதாக தேர்தல்கள் செயலகத்தின் தேர்தல் முறைப்பாட்டுப் பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.
அந்த மாவட்டத்தில் 7 தேர்தல் வன்முறைகள் பதிவாகியுள்ளன.
நுவரெலியா மற்றும் மாத்தளை மாவட்டங்களில் தேர்தல் வன்முறை தொடர்பில் தலா ஒரு சம்பவம் பதிவாகியுள்ளது.
அரசாங்க வாகனங்களின் பயன்பாடு குறித்து 29 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் தேர்தல்கள் செயலகம் குறிப்பிடுகின்றது.

No comments:
Post a Comment