Wednesday, August 14, 2013

காலி துறைமுகத்துக்கு நேற்று அழைத்துவரப்பட்டிருந்த அகதிகள் 111 பேர் இன்று காலி மாவட்ட நீதிமன்றத்தில்!

Wednesday, August 14, 2013
இலங்கை::காலி துறைமுகத்துக்கு நேற்று அழைத்துவரப்பட்டிருந்த அகதிகள் 111 பேர் இன்று காலி மாவட்ட நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துப்படவுள்ளனர்.

காலியில் இருந்து 220 கடல் மைல்கள் தொடர்பில் படகு மூலம் அவுஸ்திரேலியா பயணித்துக் கொண்டிருந்த வேளையில் அவர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.

கைதானவர்களில் 43 ஆண்களும், 20 பெண்களும், 48 சிறுவர்களும் உள்ளடங்குகின்றனர்.

அவர்கள் யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி, மட்டக்களப்பு மற்றும் பேருவளை போன்ற பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment