Sunday, June 23, 2013
இலங்கை::தெரிவு செய்யப்பட்டிருக்கும் நாடாளுமன்ற தெரிவுக்குழு தொடர்பில் தமிழ்தேசியக்கூட்டமைப்பு இன்னமும் எந்த நிலைப்பாடும் எடுக்கவில்லை என்று தெரிவித்துள்ள தமிழ் தேசியக் (புலி)கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுத்தலைவர் இரா. சம்பந்தன் அக்குழுத்தொடர்பில் விரைவில் முடிவொன்று எட்டப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் தங்களுடைய உறுப்பினர்களை இணைத்துக்கொள்ளாமை தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளது.
தெரிவுக்குழுவில் இணையுமாறு தமிழ்தேசிய கூட்டமைப்பின் குழுவினர் இந்தியா செல்வதற்கு முன்பாக அழைப்பு விடுக்கப்பட்டதாக தெரிவித்த சம்பந்தன், தற்போது தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்களில் பெரும்பான்மையானவர்கள் வெளிநாடுகளில் இருப்பதால் இது குறித்து எந்த முடிவும் எட்டப்படவில்லை என்றும் கூறினார்.
வெளிநாட்டில் இருக்கும் தமிழ்தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்கள் நாடு திரும்பிய பிறகு, எல்லோரும் கலந்துபேசி இந்த தெரிவுக்குழு தொடர்பான தமிழ் தேசிய கூட்டமைப்பின் அதிகாரப்பூர்வ நிலைப்பாட்டை தாங்கள் எடுக்கவிருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இலங்கையில் அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை திருத்துவது குறித்து ஆராய இலங்கை அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற தெரிவிக்குழுவில் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் முக்கிய சிறுபான்மைக் கட்சியான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு இடமளிக்கப்படாதது குறித்து அந்தக் கட்சி கடும் அதிருப்தியினை வெளியிட்டுள்ளது.
அதேவேளை, முக்கிய சிறுபான்மைக் கட்சியான முஸ்லிம் காங்கிரஸை புறக்கணித்து விட்டு இந்த நடைமுறைகளில் முஸ்லிம்களும் உரிய பங்களிப்பை பெற முடியாது என்று அந்தக் கட்சியின் பொதுச் செயலாளரான ஹசன் அலி தெரிவித்தார். சில வேளைகளில் அடுத்த கட்டமாக இலங்கை அரசாங்கத்தினால் உறுப்பினர்கள் அறிவிக்கப்படும் போது அதில் முஸ்லிம் காங்கிரஸுக்கும் இடமளிக்கப்படலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
அத்துடன், 13வது திருத்தச் சட்டத்தை மாற்றுவதற்காக இந்த தெரிவுக்குழு அறிவிக்கப்பட்டதாக ஒரு புறம் கூறப்பட்டாலும், அது இனப்பிரச்சினை தீர்வுக்கானது என்று மறுபுறம் கூறப்படுவதால், அந்த தெரிவுக்குழு அமைக்கப்படுவதற்கான நோக்கம் குறித்து குழப்பம் நிலவுவதாகவும் ஹசன் அலி குறிப்பிட்டார்.
அதேவேளை, 13 ஆவது திருத்தச்சட்டத்தில் உள்ளவற்றை குறைப்பதற்கான நோக்கில் அந்த தெரிவுக்குழு அமைக்கப்பட்டால் அதனை தமது கட்சி கடுமையான எதிர்ப்பினை வெளியிடும் என்றும் ஹசன் அலி மேலும் கூறினார்.
அரசியலமைப்பில் மேற்கொள்ளவுள்ள திருத்தங்கள தொடர்பில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தலைமையில் 19 பேர் கொண்ட நாடாளுமன்றத் தெரிவுக்குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பிலான அறிவிப்பு கடந்த வெள்ளிக்கிழமை சபாநாயகரினால் உத்தியோகபூர்வமாக கடந்த வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்தில் வைத்து விடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
இலங்கை::தெரிவு செய்யப்பட்டிருக்கும் நாடாளுமன்ற தெரிவுக்குழு தொடர்பில் தமிழ்தேசியக்கூட்டமைப்பு இன்னமும் எந்த நிலைப்பாடும் எடுக்கவில்லை என்று தெரிவித்துள்ள தமிழ் தேசியக் (புலி)கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுத்தலைவர் இரா. சம்பந்தன் அக்குழுத்தொடர்பில் விரைவில் முடிவொன்று எட்டப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் தங்களுடைய உறுப்பினர்களை இணைத்துக்கொள்ளாமை தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளது.
தெரிவுக்குழுவில் இணையுமாறு தமிழ்தேசிய கூட்டமைப்பின் குழுவினர் இந்தியா செல்வதற்கு முன்பாக அழைப்பு விடுக்கப்பட்டதாக தெரிவித்த சம்பந்தன், தற்போது தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்களில் பெரும்பான்மையானவர்கள் வெளிநாடுகளில் இருப்பதால் இது குறித்து எந்த முடிவும் எட்டப்படவில்லை என்றும் கூறினார்.
வெளிநாட்டில் இருக்கும் தமிழ்தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்கள் நாடு திரும்பிய பிறகு, எல்லோரும் கலந்துபேசி இந்த தெரிவுக்குழு தொடர்பான தமிழ் தேசிய கூட்டமைப்பின் அதிகாரப்பூர்வ நிலைப்பாட்டை தாங்கள் எடுக்கவிருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இலங்கையில் அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை திருத்துவது குறித்து ஆராய இலங்கை அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற தெரிவிக்குழுவில் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் முக்கிய சிறுபான்மைக் கட்சியான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு இடமளிக்கப்படாதது குறித்து அந்தக் கட்சி கடும் அதிருப்தியினை வெளியிட்டுள்ளது.
அதேவேளை, முக்கிய சிறுபான்மைக் கட்சியான முஸ்லிம் காங்கிரஸை புறக்கணித்து விட்டு இந்த நடைமுறைகளில் முஸ்லிம்களும் உரிய பங்களிப்பை பெற முடியாது என்று அந்தக் கட்சியின் பொதுச் செயலாளரான ஹசன் அலி தெரிவித்தார். சில வேளைகளில் அடுத்த கட்டமாக இலங்கை அரசாங்கத்தினால் உறுப்பினர்கள் அறிவிக்கப்படும் போது அதில் முஸ்லிம் காங்கிரஸுக்கும் இடமளிக்கப்படலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
அத்துடன், 13வது திருத்தச் சட்டத்தை மாற்றுவதற்காக இந்த தெரிவுக்குழு அறிவிக்கப்பட்டதாக ஒரு புறம் கூறப்பட்டாலும், அது இனப்பிரச்சினை தீர்வுக்கானது என்று மறுபுறம் கூறப்படுவதால், அந்த தெரிவுக்குழு அமைக்கப்படுவதற்கான நோக்கம் குறித்து குழப்பம் நிலவுவதாகவும் ஹசன் அலி குறிப்பிட்டார்.
அதேவேளை, 13 ஆவது திருத்தச்சட்டத்தில் உள்ளவற்றை குறைப்பதற்கான நோக்கில் அந்த தெரிவுக்குழு அமைக்கப்பட்டால் அதனை தமது கட்சி கடுமையான எதிர்ப்பினை வெளியிடும் என்றும் ஹசன் அலி மேலும் கூறினார்.
அரசியலமைப்பில் மேற்கொள்ளவுள்ள திருத்தங்கள தொடர்பில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தலைமையில் 19 பேர் கொண்ட நாடாளுமன்றத் தெரிவுக்குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பிலான அறிவிப்பு கடந்த வெள்ளிக்கிழமை சபாநாயகரினால் உத்தியோகபூர்வமாக கடந்த வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்தில் வைத்து விடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.


No comments:
Post a Comment