Saturday, June 08, 2013
இலங்கை::வட மாகாணசபைத் தேர்தலுக்கான ஆயத்தப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் செப்டம்பர் மாதத்தில் வட மாகாணசபைத் தேர்தல் நடத்தப்படும் என பரவலாககக் கருதப்படுகின்றது.
எவ்வாறெனினும், வட மாகாணசபைத் தேர்தல் தொடர்பில் இதுவரையில் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அநேகமாக செப்டம்பர் மாதத்தில் வட மாகாணசபைத் தேர்தல் நடைபெறும் எனவும், உத்தியோகபூர்வ அறிவிப்பிற்காக காத்திருப்பதாகவும் தேர்தல் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
தேர்தல் பணிகளில் ஈடுபடுத்தும் நோக்கில் அரச உத்தியோகத்தர்களின் தகவல்கள் திரட்டப்பட்டு வருவதாகக குறிப்பிட்டுள்ளார்.
புதிய சட்டத் திருத்தம் அமுல்படுத்தப்படாத சந்தர்ப்பத்தில் தற்போதைய வாக்காளர் பதிவியின் அடிப்படையில் தேர்தல் நடத்தப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment