Monday, June 10, 2013

அம்பாறை மாவட்ட திருக்கோயில் வீடொன்றில் ஆயுதங்கள் மீட்பு!

Monday, June 10, 2013
இலங்கை::அம்பாறை மாவட்ட திருக்கோயில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தம்பிலுவில் பிரதேசத்தின் பிரதான வீதியின் அருகிலுள்ள வீடொன்றின் பின் பகுதியில் மண்ணில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு தொகை ஆயுதங்களை திருக்கோவில் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
 
நேற்று முன்தினம் திருக்கோவில் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து திருக்கோயில் பதில் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி கே.எம்.இப்றாஹிம் தலைமையிலான குழவினர் மிக விரைவாக குறிப்பிட்ட இடத்துக்கு விஜயத்தினை மேற்கொண்டு வீட்டின் பின்புறத்தில் மண்ணில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஆயுதங்களை கைப்பற்றியுள்ளனர்.
 
இவ்வாறு கைப்பற்றப்பட்ட ஆயுதங்களை பொலிஸார் பரிசோதனை மேற்கொண்டு மேலதிக விசாரணைகளையும் நடாத்தி வருகின்றனர்.

No comments:

Post a Comment