Tuesday, June 04, 2013
இலங்கை::இராணுவ வீரர் ஒருவரின் இலத்திரனியல் அட்டையை திருடி வங்கியிலிருந்து பணத்தைப் பெற்ற குற்றத்துக்காக பொலிஸார் சந்தேகத்தின் பேரில் இன்னொரு இராணுவ வீரரைக் கைது செய்தனர்.
இலங்கை::இராணுவ வீரர் ஒருவரின் இலத்திரனியல் அட்டையை திருடி வங்கியிலிருந்து பணத்தைப் பெற்ற குற்றத்துக்காக பொலிஸார் சந்தேகத்தின் பேரில் இன்னொரு இராணுவ வீரரைக் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டவர் அக்கரைப்பற்று நீதிவான் நீதிமன்ற பதில் நீதிவான் ஏ. எச். சமீம் முன்னிலையில் ஆஜர் படுத்தப்பட்டபோது எதிர்வரும் 5 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, சந்தேக நபர் இரு தடவைகள் ஏ.ரி.எம். அட்டையைத் திருடி இரு நபர்கள் மூலம் பணத்தை அக்கரைப்பற்று மக்கள் வங்கியிலிருந்து இருபத்தாறாயிரம் ரூபா பெற்றுள்ளார்.
இது தொடர்பில் பொலிஸாருக்கு தெரிய வந்ததை அடுத்து பொலிஸார், நீதிமன்ற உத்தரவுக்கு அமைய மக்கள் வங்கி கமராவின் மூலம் பணம் பெற்ற வரை அடையாளம் கண்டு சந்தேக நபரைக் கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்தினர். இச் சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:
Post a Comment