Monday, June 24, 2013

ஜனாதிபதி தலைமையில் மின்னொளியேற்றும் வைபவம்:-தூபராமவில் ஜனாதிபதி சமய வழிபாடு!

Monday, June 24, 2013
இலங்கை::மிஹிந்தலை ரஜ மஹா விஹாரையில் லேக் ஹவுஸ் நிறுவனம் ஏற்பாடு செய்த ‘ஆலோக்க பூஜா’ நிகழ்வை மின்னொளியேற்றி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ  நேற்று உத்தியோகபூர்வமாக ஆரம்பித்துவைத்தார்.

அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி- ஊடக அமைச்சின் செயலாளர் சரித்த ஹேரத்- லேக்ஹவுஸ் நிறுவனத் தலைவர் பந்துல பத்மகுமார உட்பட முக்கியஸ்தர்கள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.
 
தூபராமவில் ஜனாதிபதி சமய வழிபாடு!
 
அநுராதபுரத்துக்கு இன்று விஜயம் செய்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ    தூபராமவில் நடைபெற்ற சமய வைபவங்களில் கலந்துகொண்டார்.

சமய வைபவங்களி;ல் கலந்துகொண்ட பொது மக்களுடன் சினேகபூர்வமாக உரையாடினார்.

வடமத்திய மாகாண ஆளுநர் கருணாரத்ன திவுல்கனே- முதலமைச்சர் எஸ்.எம். ரஞ்சித் ஆகியோர் உட்பட முக்கியஸ்தர்கள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment