Wednesday, June 12, 2013

உலகளாவிய சமாதான சுட்டெண்ணில் இலங்கை 110 வது இடம்!

Wednesday,June 12, 2013
இலங்கை::உலகளாவிய சமாதான சுட்டெண்ணில் இலங்கை 110வது இடத்தைப் பெற்றுள்ளது.
 
உலகமெங்கும் உள்ள 162 நாடுகளில் வன்முறைகள் இல்லாத பண்புகள் மற்றும் அளவீடுகள் போன்ற 22 தரக் கணிப்பீடுகளை அடிப்படையாகக் கொண்டு வருடாந்தம் இந்தச் சுட்டெண் கணிக்கப்படுகின்றது.
 
உலகளாவிய சமாதான சுட்டடெண்ணில் முதலாவது இடம் ஐஸ்லாந்துக்கு கிடைத்துள்ளதுடன் இரண்டாம், மூன்றாம் இடங்கள் முறையே டென்மார்க் மற்றும் நியுசிலாந்துக்கு கிடைத்துள்ளன.
 
இந்தச் சுட்டெண்ணில் இந்தியா 141வது இடத்தைப் பெற்றுள்ளது, பிரித்தானியா 44 வது இடத்திலும், பிரான்ஸ் 53வது இடத்திலும், அமெரிக்கா மற்றும் சீனா என்பன முறையே 99 மற்றும் 101வது இடத்தில் உள்ளதுடன் ரஷ்யாவுக்கு 155வது இடம் கிடைத்துள்ளது.
 
தெற்காசிய வலயத்தினை கருத்திற்கொண்டால் 20வது இடத்தைப் பெற்றுள்ள பூட்டான் முன்னிலையில் காணப்படுவதுடன் இலங்கையை விடவும் பங்களாதேஷ், நேபாளம் என்பன முன்லை பெற்றுள்ளன.

No comments:

Post a Comment