Thursday, May 30, 2013

இலங்கையில் பணிபுரியும் வெளிநாட்டு பணியாளர்கள் உடனடியாக தம்மை பதிவுசெய்துகொள்ள வேண்டும்: வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம்!

Thursday, May 30, 2013
இலங்கை::பதிவுகள் காலாவதியாகிய நிலையில் இலங்கையில் பணிபுரியும் வெளிநாட்டு பணியாளர்கள் உடனடியாக தம்மை பதிவுசெய்துகொள்ள வேண்டும் என வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் அறிவித்துள்ளது.
 
பதிவுகள் காலாவதியாகியுள்ளதால் வெளிநாட்டு பணியாளர்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்க நேரிட்டுள்ளதாக பணியகத்தின் பிரதி பொது முகாமையாளர் மங்கல ரந்தெனிய குறிப்பிட்டுள்ளார்.
 
 வெளிநாட்டு பணியாளர்களுக்கு பல்வேறு சலுகைகள் இழக்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார். குறிப்பாக மீண்டும் பதிவுசெய்துகொள்வதால் அவர்களுக்கு சட்ட ரீதியான அங்கீகாரம் கிடைப்பதுடன் காப்புறுதியும் நீடிக்கப்படுவதாக பிரதிப் பொது முகாமையாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
பதிவு காலாவதியானவர்கள் மூன்று மாதங்களுக்குள் தம்மை மீளப் பதிவுசெய்து கொள்வதால் வெளிநாட்டுப் பணியாளர்களுக்கான மேலும் பல நன்மைகளை பெற்றுக்கொள்வதற்கான தகுதியைப் பெறுவார்கள் என்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் குறிப்பிட்டுள்ளது.
 

 

No comments:

Post a Comment