Thursday, May 30, 2013

யாழ்ப்பாணம் கோப்பாய் தேசிய கல்வியியல் கல்லூரியில் பௌத்த பிக்குகள் குழுவொன்று தமிழ்மொழிப் பாடநெறியை பூர்த்தி செய்துள்ளது!

Thursday, May 30, 2013
இலங்கை::யாழ்ப்பாணம் கோப்பாய் தேசிய கல்வியியல் கல்லூரியில் பௌத்த பிக்குகள் குழுவொன்று தமிழ்மொழிப் பாடநெறியை பூர்த்தி செய்துள்ளது.
 
கல்வியமைச்சின் மொழிக் கல்வி பிரிவின் ஆலோசகர் உயன்கல்ல ஞானரத்ன தேரரின் பங்களிப்புடன் இந்த பயிற்சிநெறி வழங்கப்பட்டுள்ளது.
 
இதுதவிர, பயிற்சி நெறி காலத்தில் குறித்த பௌத்த பிக்குகள் குடாநாட்டில் இடம்பெற்ற பல நிகழ்வுகளில் கலந்து கொண்டதோடு, கிராமங்களுக்கு சென்று பொதுமக்களுடன் இணைந்து செயற்பாடுகளில் ஈடுபட்டிருந்தனர்.
 
தமிழ்மொழி கற்பதன் ஊடாக ஏற்படும் சமூக நல்லிணக்கம், மற்றும் திறனபிவிருத்தி என்பன நாட்டின் முன்னேற்றத்திற்கு பங்களிப்பை செலுத்தும் என்று உயன்கல்ல ஞானரத்ன தேரர் குறிப்பிட்டுள்ளார்.
 
பௌத்த மத குருமார் பயிற்சிநெறியை நிறைவு செய்து விடுகை பெறும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

No comments:

Post a Comment