Thursday, May 30, 2013

இவரை கண்டால் உடனடியாக போலீசை தொடர்பு கொள்ளவும்: ( LTTE வரதன் என்றழைக்கப்படும் பாலசுப்ரமணியம் ஜதீசன்)

Thursday, May 30, 2013
இலங்கை::மாத்தறையில் சிறைச்சாலை உத்தியோகத்தர்களிடமிருந்து தப்பிச்சென்ற கைதிகள் தொடர்பான தகவல் தெரிந்திருந்தால், அது குறித்து தமக்கு அறியத் தருமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.
 
முன்னாள் LTTE உறுப்பினர் உள்ளிட்ட இரண்டு கைதிகள் அண்மையில் மாத்தறை நகரிலிருந்து தப்பிச்சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
பயங்கரவாத செயற்பாடுகளுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் சிறைத் தண்டனை அனுபவித்து வந்த வரதன் என்றழைக்கப்படும் பாலசுப்ரமணியம் ஜதீசன் என்பவரும் தப்பிச் சென்றவர்களில் அடங்குகின்றார்.
 
குறித்த கைதிகள் தொடர்பான தகவல்களை வழங்குவதற்கு விசேட தொலைபேசி இலக்கங்கள் இரண்டினை பொலிஸார் ஊடகங்களுக்கு வழங்கியுள்ளனர்.
 
இதற்கமைய, இந்த சந்தேகநபர்கள் தொடர்பிலான தகவல்களை பயங்கரவாத விசாரணைப் பிரிவின் 0112 451 634 அல்லது 0112 451 636 என்ற
இலக்கங்களுடன் தொடர்புகொண்டு தெரிவிக்கமுடியுமென பொலிஸார் குறிப்பிட்டனர்.

No comments:

Post a Comment