Friday, May 31, 2013

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான கடல்மார்க்கமான மின்சார பரிமாற்று வேலைத்திட்டம், தொழில்நுட்ப மற்றும் மதம் சார்ந்த சிக்கல்களால் கைவிடும் நிலை!

Friday, May 31, 2013
சென்னை::இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான கடல்மார்க்கமான மின்சார பரிமாற்று வேலைத்திட்டம், தொழில்நுட்ப மற்றும் மதம் சார்ந்த சிக்கல்களால் கைவிடும் நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
 
 மதுரையில் இருந்து, அனுராதபுரம் வரையில், கடல் மார்க்கமாக மின்சாரத்தை பரிமாற்றும் திட்டம் ஒன்று, கடந்த 2007- 2008ம் ஆண்டுகளில் பிரதமர் மன்மோகன் சிங்கினால் அறிவிக்கப்பட்டது.
 
இந்த திட்டத்தின் கீழ், 285 கிலோமீற்றர் நீலமான மின்சார தந்தி மூலம், 1000 மெகாவோல்ட் மின்சாரத்தை பரிமாற்ற எதிர்பர்க்கப்பட்டிருந்தது.
 
எனினும், இந்த தந்தியின் நீலத்தை குறைப்பதற்கான நடவடிக்கைகளால் பல்வேறு மத நம்பிக்கை சார்ந்த பகுதிகளுக்கு பாதிப்பு ஏற்படும் நிலை காணப்படுகிறது.
 
இந்த வேலைத்திட்டம் இன்னும் நடைமுறைப்படுத்தப்படாமைக்கு, இதுவே காரணமாக இருப்பதாகவும் குறித்த வேலைத்திட்டத்துக்கு பொறுப்பான இந்திய நிறுவனத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.  

No comments:

Post a Comment