Friday, May 31, 2013

ரயில் நிலை­யத்­தில் பிச்சையெடுப்பவரின் 2 மணித்தியால வருமானம் 4800 ரூபா!

Friday, May 31, 2013
இலங்கை::கொழும்பு கோட்டை ரயில் நிலைய மேடை­களில் பிச்­சை­யெ­டுத்துக் கொண்­டி­ருந்த போது கைது செய்­யப்­பட்ட யாசகப் பெண் இரண்டு மணித்­தி­யா­ல­ங்­க­ளுக்குள் பிச்­சை­யெ­டுத்து வரு­மா­ன­மாக 4800 ரூபா பெற்­ற­தாக கோட்டை நீதவான் நீதி­மன்­றத்தில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

கோட்டை ரயில் நிலை­யத்­துக்குள் பிச்­சை­யெ­டுத்துக் கொண்­டி­ருந்த ஒரு பெண் உட்­பட நால்வர் ரயில்வே பாது­காப்பு ஊழி­யர்­களால் கைது செய்­யப்­பட்டு கடந்த 28 ஆம் திகதி கோட்டை நீதவான் நீதி­மன்­றத்தில் ஆஜர் செய்­யப்­பட்­டனர்.

இதில் பிச்­சை­யெ­டுத்த பெண்­ணொ­ருவர் காலை 7.00 மணி முதல் 9.00 மணி­வ­ரை­யி­லான இரண்டு மணித்­தி­யா­லங்­களில் 4800 ரூபாவை வரு­மா­ன­மாகப் பெற்­ற­தாக தெரி­ய­வந்­துள்­ளது.
கோட்டை  நீதி­மன்ற நீதிவான் திலின கமகே இந்த  நால்வரையும்  கடுமையாக  எச்சரித்து விடுதலை செய்தார்.

No comments:

Post a Comment