Wednesday, May 1, 2013

அவுஸ்திரேலியா சென்ற 819 இலங்கையர்கள் பலவந்தமாக நாடு கடத்தல்: சட்டவிரோதமாக நாட்டுக்குள் பிரவேசிப்போரை, நாடு கடத்தும் செயற்பாடுகள் தொடர்ந்தும் மேற்கொள்ளப்படும்: அவுஸ்திரேலிய!

Wednesday, May 01, 2013
அவுஸ்திரேலியா::இலங்கையர்கள் பலவந்தமாக நாடு கடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அவுஸ்ரேலிய இணையத்தளம் ஒன்று இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.

இதனிடையே, சட்டவிரோதமாக நாட்டுக்குள் பிரவேசிப்போரை, நாடு கடத்தும் செயற்பாடுகள் தொடர்ந்தும் மேற்கொள்ளப்படும் என்று அவுஸ்திரேலிய அரசாங்கம் அறிவித்துள்ளது.

இதேவேளை, அவுஸ்திரேலியாவிற்கு சட்டவிரோதமாக செல்வோரை தடுக்க தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
 இதேவேளை, 2012ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் 2013ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரையில் சட்டவிரோதமாக படகு மூலம் அவுஸ்திரேலியா செல்ல முற்பட்ட 3 ஆயிரத்து 286 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளார்.
 
 
 

No comments:

Post a Comment