Monday, April 29, 2013

அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இரு கைதிகள், வெளியில் அழைத்துவரப்பட்டபோது தப்பி ஓட்டம்!

Monday, April 29, 2013
இலங்கை::அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இரு கைதிகள், வெளியில் அழைத்துவரப்பட்டபோது, தப்பிச் சென்றுள்ளனர்.

மிஹிந்தலை ரஜரட்டை பல்கலைக்கழகத்தில் அடுத்தமாதம் நடைபெறவுள்ள பட்டமளிப்பு விழாவினை முன்னிட்டு மேற்கொள்ளப்படும் கட்டட வேலைகளுக்காக 20 கைதிகள் வெளியில் அழைத்துவரப்பட்டனர்.

இவர்கள் இரு ஜெயிலர்களிடம் ஓப்படைக்கப்பட்டிருந்தனர்.

இந்தநிலையில், குறித்த இருவரும் நேற்று மதிய உணவின் பின்னர் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரித்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து சிறைச்சாலை அதிகாரிகளால், மிஹிந்தலை பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி குறித்த இரு கைதிகளையும் கைதுசெய்வது தொடர்பில் தற்போது விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மிஹிந்தலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment