Monday, April 29, 2013

பேலியகொடையில் ஒருவரை துப்பாக்கி முனையில் அச்சுறுத்தி கடத்திச் சென்று கப்பம் கோரியவர் கைது!:-யுவதியை ஒருவரை கடத்திச் சென்று 25 இலட்சம் ரூபா கப்பம் கோரியவர் கைது!:-யாழ்ப்பாணத்தில் பண மோசடியில் ஈடுபட்ட வந்த நபர் ஒருவர் கைது!

Monday, April 29, 2013
இலங்கை::பேலியகொடையில் ஒருவரை துப்பாக்கி முனையில் அச்சுறுத்தி கடத்திச் சென்று கப்பம் கோரிய சந்தேகநபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கொழும்பு 14 வேல்ஸ் குமார வீதியைச் சேர்ந்த ஒருவரே சந்தேகநபரால் கடத்தப்பட்டிருந்தார்.
 
கடத்தப்பட்டவரை விடுவிப்பதற்காக சந்தேகநபர் எட்டு இலட்சம் ரூபா கப்பம் கோரியிருந்தார்.இதற்கமைய விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸ் குற்றத் தடுப்புப் பிரிவினர் 19 வயதான சந்தேகநபரை கைது செய்துள்ளனர்.
சந்தேகநபர் களனி சிங்காரமுல்ல பகுதியைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது.
 
யுவதியை ஒருவரை கடத்திச் சென்று 25 இலட்சம் ரூபா கப்பம் கோரியவர் கைது!
 
யுவதியை ஒருவரை கடத்திச் சென்று 25 இலட்சம் ரூபா கப்பம் கோரிய ஒருவரை பேலியகொடை வடக்கு பிரதேச குற்றத் தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்.வாரியபொல பகுதியில் உள்ள அரச நிறுவனம் ஒன்றில் கடமையாற்றும் யுவதியுடன் தவறான தொடர்பு வைத்திருந்த சந்தேகநபர் அவரை பொத்துவில் பகுதிக்கு அழைத்துச் சென்றிருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
 
பின்னர் யுவதியின் வீட்டுக்கு தொடர்பினை ஏற்படுத்திய சந்தேகநபர் அவரை விடுவிப்பதற்காக 25 இலட்சம் ரூபா கப்பம் கோரியுள்ளார்.
இது தொடர்பில் குறித்த யுவதியின் சித்தி பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டுக்கு அமைய சந்தேகநபர் ஆறு இலட்சம் ரூபாவை பெற்றுக்கொண்ட சந்தர்ப்பத்தில் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.
 
இரண்டு பிள்ளைகளின் தந்தையான குடும்பஸ்தர் ஒருவரே கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
யுவதியுடன் தொடர்பினை வைத்திருந்த காலப் பகுதியில் சந்தேகநபர் அவரது தங்க ஆபரணங்கள் மற்றும் பணம் ஆகியவற்றை அபகரித்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
 
யாழ்ப்பாணத்தில் பண மோசடியில் ஈடுபட்ட வந்த நபர் ஒருவர் கைது!
 
யாழ்ப்பாணத்தில் பண மோசடியில் ஈடுபட்ட வந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
 
பொது மக்கள் மற்றும் முன்னாள் புலிபோராளிகளாக இருந்து புனர்வாழ்வு பெற்றவர்களையும் அணுகி வேலை பெற்றுத்தருவதாகவும், வாகனங்களை வட்டியில்லாக் கடனுக்கு பெற்றுத்தருவதாகவும் கூறி பலரிடம் மோசடி செய்து வந்த நபர் ஒருவர் பாதிக்கப்பட்டவர்களினால் பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
 
யாழ்.தாவடிப் பகுதியில் பொதுமக்களையும், முன்னாள் போராளிகளையும் ஏமாற்றி பணத்தை பெற்றுக் கொண்டு தலைமறைவாகி இருந்தார்.

குறித்த இளைஞர் யாழ்ப்பாணம் பகுதியில் நிற்பதைக் அறிந்த பாதிக்கப்பட்ட இளைஞர்கள் குறித்த இளைஞரை பிடித்து கிராம அலுவலரிடம் ஒப்படைத்துள்ளார்கள்.
 
இதனைத் தொடர்ந்து குறிப்பிட்ட நபர் சுன்னாகம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
 
குறித்த இளைஞரிடம் இருந்து பல கையடக்கத் தொலைபேசிகள், சிம்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. குறித்த நபரிடம் தொடர் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்

No comments:

Post a Comment