Monday, April 1, 2013

இலங்கையில் நடைபெறவுள்ள காமன்வெல்த் மாநாடு குறித்து உரிய நேரத்தில் மத்திய அரசு முடிவு செய்யும்: நாராயணசாமி!

Monday, April 01, 2013
சென்னை::இலங்கையில் நடைபெறவுள்ள காமன்வெல்த் மாநாடு குறித்து உரிய நேரத்தில் மத்திய அரசு முடிவு செய்யும் என்று நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் நாராயணசாமி தெரிவித்தார். டெல்லியில் இருந்து சென்னை வந்த அவர் மீனம்பாக்கம் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறுகையில், இலங்கையில் நடைபெறவுள்ள காமன்வெல்த் நாடுகளின் மாநாட்டில் இந்தியா பங்கேற்க கூடாது என்று மத்திய அமைச்சர் வாசன் கூறியிருப்பது அவரது தனிப்பட்ட கருத்து ஆகும். முதல்வர் ஜெயலலிதா, தி.மு.க. தலைவர் கருணாநிதி ஆகியோரும் இதே கருத்தை வலியுறுத்தி உள்ளனர். காமன்வெல்த் மாநாடு வரும் நவம்பரில்தான் நடைபெறவுள்ளது. அதற்கு பல மாதங்கள் இருப்பதால் இந்தியாவின் நிலை குறித்து உரிய நேரத்தில் மத்திய அரசு முடிவெடுக்கும் என்றார்.

No comments:

Post a Comment