Monday, April 1, 2013

இலங்கையில் வாழும் எந்தவொரு இனத்துக்கு எதிராகவோ அல்லது ஒரு சமூகத்தின் சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்தும் வகையிலோ நடந்துகொள்பவர்களுக்கு எதிராக அரசாங்கம் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கும்: மைத்திரிபால சிறிசேன!

Monday, April 01, 2013
இலங்கை::இலங்கையில் வாழும் எந்தவொரு இனத்துக்கு எதிராகவோ அல்லது ஒரு சமூகத்தின் சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்தும் வகையிலோ நடந்துகொள்பவர்களுக்கு எதிராக அரசாங்கம் சட்டரீதியான நடவடிக்கைகளை எடுக்கும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளர் நாயகமும், அமைச்சருமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

இலங்கையிலுள்ள சிங்கள, முஸ்லிம் இனங்களுக்கிடையில் ஒற்றுமையின்மையை ஏற்படுத்தக்கூடியதான வன்முறைச் சம்பவங்கள் கடந்த சில தினங்களில் இடம்பெற்றுள்ளன. இவ்வாறான சம்பவங்களை அரசாங்கம் என்ற ரீதியில் கடுமையாகக் கண்டிப்பதுடன், அவற்றைக் கட்டுப்படுத்துவதற்கான சகல நடவடிக்கைகளையும் எடுத்திருப்பதாக அமைச்சர் நேற்றுத் தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள அமைச்சரின் உத்தி யோகபூர்வ இல்லத்தில் நேற்று நடத்திய விசேட ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு கூறி னார். தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அமைச்சர், 30 வருட கொடூர யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டு அனைத்து இன மக்களும் ஒற்றுமையாக அமைதியான சூழ்நிலையில் வாழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில், அமைதியைக் குழப்பும் வகையில் சில குழுக்கள் செயற்படுகின்றன.

இலங்கையிலுள்ள எந்தவொரு சமூகத்தின் உயிர்களுக்கோ அல்லது அச்சமூகத்தின் தனிப்பட்ட அல்லது பொதுச் சொத்துக்களுக்கோ பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் நடந்துகொள்ளும் எந்தவொரு நபருக்கும் எதிராக அரசாங்கம் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கும்.

கடந்த தினங்களில் முஸ்லிம் சமூகத்தினரின் சொத்துக்களுக்கு சேதம் ஏற்படும் வகையில் நடத்தப்பட்ட வன்முறைச் சம்பவங்களை அரசாங்கம் என்ற ரீதியில் கடுமையாகக் கண்டிக் கின்றோம். இவ்வாறான சம்பவங்களுக்கும் அரசாங்கத்துக்கும் தொடர்பு இருப்பதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களையும் நாம் மறுக்கின்றோம்.

இவ்வாறான சம்பவங்களுக்கும் அரசாங்கத்துக்கும் எத்தொடர்பும் இல்லை. அவ்வாறு தொடர்புவைத்திருக்க வேண்டிய தேவையும் அரசுக்கு இல்லை. கடந்தகால யுத்தம் காரணமாக நாடு பின்னோக்கிச் சென்றிருக்கும் சூழலில் நாட்டைக் கட்டியெழுப்ப அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த நிலையிலேயே சமாதானச் சூழலைக் குழப்பும் செயற் பாடுகளில் சில குழுக்கள் முயற்சிக்கின்றன.

இதன் ஊடாக அரசியல் இலாபம் தேடுவதற்கும் சிலர் முயற்சிக்கின்றார். நாட்டில் குழப்பநிலையொன்றை ஏற்படுத்தி அரசாங்கத்தின் மீது அதிருப்தியை ஏற்படுத்துவதற்கே சிலர் முயற்சிகள் எடுக்கின்றனர்.

எனினும், இவ்வாறான குழப்ப சூழ்நிலைகள் தொடராமல் இருப்பதற்கு பொலிஸார் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு, ஜனாதிபதி, பாதுகாப்புச் செயலாளர், பொலிஸ் மா அதிபர் ஆகி யோர் உரிய பணிப்புரைகளை வழங்கியுள்ளனர். இவ்வாறான சம்பவங்களைத் தடுப்பதற்கு உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்கள்.

அத்துடன், இனங்களுக்கிடையில் குழப்பநிலையை ஏற்படுத்தும் வகையிலான விடயங்களில் கலந்துகொள்ளவோ, ஈடுபடவோ வேண்டாம் என நாட்டு மக்களிடம் அரசாங்கம் என்ற ரீதியிலும், சிரேஷ்ட அரசியல்வாதி என்ற ரீதியிலும் கேட்டுக்கொள்கின்றேன் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment