Sunday, March 31, 2013

புலி ஆதரவு புலம்பெயர் தமிழர்களினால் இலங்கை பாதிக்கப்பட்டுள்ளது - பிரசாத் காரியவசம்!

Sunday, March 31, 2013
சென்னை::புலி ஆதரவு புலம்பெயர் தமிழர்களினால் இலங்கை பாதிக்கப்பட்டுள்ளது - பிரசாத் காரியவசம்!

ஈழம் கொள்கைக்காக செயற்படும் சர்வதேச புலம்பெயர் புலி ஆதரவு தமிழர்களினால் இலங்கை தொடர்ந்தும் பாதிக்கப்பட்டுள்ளதாக  இலங்கையின் உயர்ஸ்தானிகர் பிரசாத் காரியவசம் தெரிவித்துள்ளார்.

இந்திய மக்களவையின் தொலைக்காட்சிக்கு வழங்கிய செவ்வியில் கலந்துகொண்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அவ்வாறானவர்களின் எண்ணங்கள் மாற்றமடைய வேண்டும் எனவும் நாட்டில் அனைவரும் சமத்துவமாக வாழும் முறைமையை எடுத்துக்காட்டாக கொண்டு செயற்பட வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் நிலவும் பிரச்சினைகள், அபிவிருத்தி, இனங்களுக்கிடையே புரிந்துணர்வை ஏற்படுத்தல் போனற அடிப்படை விடயங்களுக்கான தீர்வினைப் பெறுவதற்கு இடமளிக்கப்பட வேண்டுமெனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment