Sunday, March 31, 2013

புதிய காத்தான்குடி இல் 2கிலோகிராம் கஞ்சாவை பொலிசார் கைப்பற்றினர்!

Sunday, March 31, 2013
இலங்கை::புதிய காத்தான்குடி மத்திய வீதி 167சீ தெற்கு கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட வீடொன்றிலிருந்து 2கிலோ கிராம் இடையுள்ள கஞ்சாவை காத்தான்குடி பொலிசார் நேற்றைய தினம் காலை கைப்பற்றி உள்ளனர் .

நேற்றைய தினம் பொலிசாருக்கு கிடைக்கபெற்ற தகவலை அடுத்து மத்திய வீதியிலுள்ள வீடொன்றை சுற்றி வளைத்து சோதனையில் ஈடுபட்ட போது வீட்டிலுள்ள அலுமாரி ஒன்றிலிருந்து 2கிலோ இடையுள்ள கஞ்சாவை கண்டு பிடித்தாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.

இதன்போது அவ்வீட்டில் இருந்த வீட்டு உரிமையாளரின் மனைவி மயக்கமுற்று தனது வீட்டிலேயே விழுந்ததனால் உடனடியாக வைத்திய சாலையில் அனுமத்திக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் நிலையில் அவரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் இவரது கணவரான மதார் போதைப்பொருள் மொத்த வியாபாரி என தெரிய என வந்துள்ளதாக மேலும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment