Sunday, March 31, 2013

சிறிலங்கா சுதந்திர கட்சியை சக்திமயப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ளது: எஸ்.எம். சந்திரசேன!

Sunday, March 31, 2013
இலங்கை::சிறிலங்கா சுதந்திர கட்சியை சக்திமயப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, பொருளாதார பிரதி அமைச்சர்
எஸ்.எம். சந்திரசேன தெரிவித்துள்ளார்.

யாப்பகுவ விஜயபாகு வித்தியாலயத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்த தலைவராக ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷ காணப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

எனவே யாரும் அஞ்ச வேண்டிய அவசியம் இல்லை.

இதற்கிடையில் யுத்த காலத்தில் மக்களிடேயே காணப்பட்ட ஒற்றுமை தற்போது மறந்து போய்விட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment