Saturday, March 30, 2013

தமிழ் தேசிய (புலி)கூட்டமைப்பின் கிளிநொச்சி காரியாலயம் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களுக்கும் தங்களுக்கும் தொடர்பில்லை: இராணுவம் நிராகரிப்பு!

Saturday, March 30, 2013
இலங்கை::தமிழ் தேசிய (புலி)கூட்டமைப்பின் கிளிநொச்சி காரியாலயம் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களுக்கும் தங்களுக்கும் தொடர்பில்லை என்று இராணுவம் தெரிவித்துள்ளது.

இராணுவ பேச்சாளர் ருவான் வணிகசூரிய இதனைத் தெரிவித்துள்ளார்.

இன்று முற்பகல் இடம்பெற்ற இந்த தாக்குதலை, இராணுவத்தினரே மேற்கொண்டதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.

இந்த நிலையில் எமது செய்திப்பிரிவு இராணுவ பேச்சாளர் ருவான் வணிகசூரியவை தொடர்பு கொண்டு வினயபோது, இந்த குற்றச்சாட்டை அவர் நிராகரித்தார்.

தமிழ் தேசிய (புலி)கூட்டமைப்பின் செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து,
பொது மக்களே இந்த தாக்கதலை மேற்கொண்டதாக, அவர் தெரிவித்துள்ளார்.

எனினும் நிலைமையை காவற்துறையினர் பின்னர் கட்டுப்பாட்டுக்கு கொண்டுவததாக தெரிவித்த அவர், எனினும் இதற்கும் இராணுவத்தினருக்கும் சம்பந்தமில்லை என்றும் குறிப்பிட்டார்.

கிளிநொச்சியில் உள்ள தமிழ் தேசிய (புலி)கூட்டமைப்பின் காரியாலயம் மீது இன்று தாக்குதல் ஒன்ற மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சம்பவத்தில் 13 பேர் வரையில் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்ற போதும், காவற்துறையினர் அதனை உறுதிப்படுத்தவில்லை.

சுமார் 50 பேர் கொண்ட குழு ஒன்றே இந்த தாக்குதலை மேற்கொண்டதாக காவற்துறை ஊடகப்பிரிவில் தெரிவிக்கப்பட்டது.

No comments:

Post a Comment