Thursday, March 21, 2013

இலங்கைக்கு எதிராக அமெரிக்காவினால் கொண்டுவரப்பட்டுள்ள தீர்மானம் முற்றிலும் தவறானது: மஹிந்த சமரசிங்க!

Thursday, March 21, 2013
ஜெனிவா::இலங்கைக்கு எதிராக அமெரிக்காவினால் கொண்டுவரப்பட்டுள்ள இந்த தீர்மானத்தில் உள்ள அனைத்து விடயங்களும் தவறானவை என்று இலங்கையின் ஜெனிவா மனித உரிமைகள் பேரவைக்கான சிறப்புத் தூதுவரான மஹிந்த சமரசிங்க தெரிவித்தார்.

ஜெனிவாவில் உள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிரான அமெரிக்காவினால் கொண்டுவரப்பட்டுள்ள தீர்மானத்தின் மீதான விவாத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இலங்கையில் இருக்கின்ற அனைவரும் சமவுரிமைகளை அனுபவிக்கும் வகையில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் அமெரிக்காவினால் கொண்டுவரப்பட்ட இந்த தீர்மானம் முற்றிலும் தவறானதாகும் என்றார்.


No comments:

Post a Comment