Sunday, March 31, 2013

மோல்டா கடவுச்சீட்டுடன் ஈரான் பிரஜைகள் கைது!

Sunday, March 31, 2013
இலங்கை::போலியான மோல்டா நாட்டு கடவுச் சீட்டை பயன்படுத்தி லண்டன் செல்ல முயற்சித்த மூன்று ஈரான் நாட்டு பிரஜைகள் கடடுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடவுச்சீட்டு தொடர்பில் எழுந்த சந்தேகத்தை அடுத்து இலங்கை விமான சேவை ஆணைக்குழு ஆவண சோதனை அதிகாரிகளால் கட்டுநாயக்க சர்வதேச நிலைய குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளிடம் சந்தேகநபர்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நபர்களிடம் ஈரான் நாட்டு கடவுச் சீட்டும் காணப்பட்டதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

வெல்லம்பிட்டிய,சிறி அனந்தாராம பிரதேசத்தில் ஹேரோயின் வைத்திருந்த நபர் ஒருவர் கைது!

வெல்லம்பிட்டிய, சிறி அனந்தாராம பிரதேசத்தில் ஹேரோயின் வைத்திருந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபரிடமிருந்து 5 கிராம் 50 மில்லி கிராம் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸர் தெரிவித்தனர்.

வெல்லம்பிட்டிய பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது இச்சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் வெல்லம்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 23 வயதான இளைஞன் என பொலிஸார் குறிப்பிட்டனர். 

No comments:

Post a Comment