Tuesday, February 12, 2013
காதலர் தினத்தை முன்னிட்டு தாய்லாந்தின் அயுதயா பகுதி மக்கள் வித்தியாசமான சடங்கு ஒன்றை செய்கிறார்கள். முதலில் அழகான பெண் எருமை மாட்டை தேர்வு செய்து, அதற்கு ‘மாப்பிள்ளை’ பார்க்கிறார்கள். நல்ல ‘வரன்’ கிடைத்ததும் கல்யாணம் செய்து வைக்கிறார்கள். முழு அலங்காரத்துடன் 8 வயது மணப்பெண் எருமை திருநிறைச்செல்வி ‘தாங் க்வா’ ஓரிடத்தில் காத்திருக்க.. 21 வயது மாப்பிள்ளை எருமை திருநிறைச்செல்வன் ‘யாய் சாய் யுவன்’ அவர்களை முழு மரியாதையுடன் மணக்கூடத்துக்கு அழைத்து செல்கின்றனர் ஊர் மக்கள். மொய் எழுதுவது, தடபுடல் விருந்தும் உண்டாம். நல்ல, ஆரோக்கியமான கன்றுக் குட்டிகளை உருவாக்க வேண்டும் என்பதுதான் இந்த சடங்கின் நோக்கம்.

No comments:
Post a Comment